tamilnadu

10 ஆண்டு சிறை - சொத்துக்கள் பறிமுதல்!

சென்னை, ஜூலை 13- தமிழ்நாடு சட்டப்பேரவையில், ஜூலை 29 அன்று ‘மதுவிலக்குத் திருத்தச் சட்ட மசோதா 2024’ கொண்டு  வரப்பட்டு ஒருமனதாக நிறைவேற்  றப்பட்டது. பிறகு, ஆளுநர் ஒப்புத லுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஜூலை 11 அன்று ஆளுநர் ஆர்.என்.  ரவி மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த நிலையில், அது தொடர்பான விவ ரங்கள் உடனடியாக தமிழ்நாடு அர சிதழில் வெளியிடப்பட்டு, புதிய சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தப் புதிய சட்டத்திருத்தத் தின் படி, 100 லிட்டருக்கு மேல் சட்ட விரோதமாக மதுபானம் இறக்கு மதி, ஏற்றுமதி போக்குவரத்து அல்  லது வைத்திருந்தால் மற்றும் சட்ட விரோதமாக மதுபானம் தயாரித் தால், ஆலை அல்லது மதுபான நொதி  வடிப்பாலை கட்டினால் இனி மூன்று  ஆண்டுகள் முதல் ஏழு ஆண்டு களுக்கு குறையாமல் சிறைத் தண்  டனை மற்றும் இரண்டு லட்சம் ரூபாய் முதல் மூன்று லட்சம் வரை  அபராதம் விதிக்கப்படும்.

மேலும், தமிழ்நாட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சுவோர் மற்றும் விற்  பனை செய்வோர் மீது கடுமையான  நடவடிக்கைகள் எடுத்திடும் வகை யில், இனிமேல் ஆயுட்காலத்தில் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் பத்து லட்சம் ரூபாய்க்கு குறை  யாமல் அபராதம் விதிக்கப்படும்.

ஜாமீன் கிடையாது!

இது தவிர, குற்றங்களில் பயன்  படுத்தும் வாகனங்கள் உள்ளிட்ட  அனைத்து அசையும் சொத்துக்கள்  பறிமுதல் செய்யப்படும். கள்ளச் சாராயம் தொடர்பான மோசமான குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடு பட்டவர்களிடம் இருந்து அவர் களது நன்னடத்தைக்கான பிணை யப் பத்திரத்தை பெற இச்சட்டத்தின்  கீழ் நிர்வாக நடுவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், தண்டிக்கப்பட்ட ஒரு  நபர் மீண்டும் தண்டிக்கப்படும் போது, அந்த நபரின் சிறைவாசம்  முடிந்து பின்பு, அவரது தற்போ தைய வசிப்பிடப் பகுதியில் இருந்து  அவர் வெளியேறி வேறொரு மாவட்  டத்திற்கு அல்லது வேறொரு பகு திக்குச் சென்று வசிக்க உத்தரவு பிறப்பிக்குமாறு மதுவிலக்கு அலு வலர்கள் நீதிமன்றத்தில் விண்ணப்  பிக்கவும் வழி வகை செய்யப்பட் டுள்ளது.

இத்துடன், மூன்று அல்லது  அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக் குக் கடுங்காவல் சிறைத் தண்டனை  வழங்க கூடிய குற்றங்கள், பிணை யில் விடுவிக்க முடியாத குற்றங் களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இச்சட்டத் திருத்தத்  தின்படி, குற்றம் சாட்டப்பட்ட வர்கள் எளிதில் பிணையில் வெளி யில் வர முடியாதவாறு கடும் சட்டப்  பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. அரசுத்  தரப்பு வழக்கறிஞர் சம்மதமின்றி பிணை வழங்க இயலாத வகை யில் இச்சட்டத்தில் வழிவகை செய்  யப்பட்டுள்ளது என்றும் முதலமைச் சர் அறிவித்திருக்கிறார்.