tamilnadu

img

கால்நடை சுகாதார விழிப்புணர்வு சிறப்பு முகாம்   '

கால்நடை சுகாதார விழிப்புணர்வு சிறப்பு முகாம்   '

ராணிப்பேட்டை, ஜூன் 12 –  சோளிங்கர் ஊராட்சி ஒன்றியம், மேல் வெங்கடாபுரம் ஊராட்சியில், கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் புதனன்று (ஜூன் 11) சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாமை மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா தொடங்கி வைத்தார். இந்த முகாமில் சுமார் 815 கால்நடைகள் பயனடைந்தன. இந்த முகாமில் சிறந்த கால்நடை வளர்ப்பவர்கள் 3 நபர்களுக்கும், நல்ல முறையில் கன்றுகள் பராமரிக்கும் 3 நபர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கினார். மேலும், கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் கால்நடைகளுக்கு தேவையான தீவன விதைகள் மற்றும் தாது உப்புக்கள், தாது உப்பு கட்டி ஆகியவற்றை கால்நடை வளர்ப்போருக்கு வழங்கினார். இந்த முகாமில் எண்டோஸ்கோபிக் செயற்கை முறை கருவூட்டல் கருவி வழங்கினார். மலட்டுத்தன்மை குறைகளை இக்கருவி மூலம் கண்டறிந்து நவீன சிகிச்சைகள் மேற்கொள்ள முடியும்.