tamilnadu

img

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் முதியவர் கைது  

செங்கல்பட்டில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 50 வயது முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.  

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த ரவி என்பவர் பெயின்ட்டிங் வேலை செய்து வருகிறார். இவருக்கு 10 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.  

இந்நிலையில் வேலைக்கு சென்று வீடு திரும்பிய தனது பெற்றோரிடம் 6 வயது சிறுமி, தான் விளையாடி கொண்டிருக்கும்போது பக்கத்துவீட்டு நபர் பனங்கிழங்கு பிடிங்கி தருவதாக கூறி அழைத்துச்சென்று தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறினார். இதை கேட்ட பெற்றோர் திருக்கழுக்குன்றம் போலீசில் புகார் அளித்தனர்.

அதனைதொடர்ந்து தப்பியோடிய பாபு(வயது 50) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் தேடப்பட்டு வந்த பாபுவை இன்று மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். 

;