tamilnadu

img

செங்கல்பட்டு: பள்ளிக்கட்டிடத்தை இடித்து தரைமட்டமாக்கிய மர்மநபர்கள்  

மதுராந்தகம் அருகே இரவோடு இரவாக மர்மநபர்கள் சிலர் பள்ளி கட்டிடத்தை இடித்து தரைமட்டமாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள மெய்யூரில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது.  இந்நிலையில் இந்த பள்ளி கட்டிடத்தை நேற்று இரவோடு இரவாக மர்ம நபர்கள் சிலர் இடித்து தரைமட்டமாக்கி உள்ளனர்.  மேலும் அந்த பள்ளியிலிருந்த இரும்பு உள்ளிட்ட பொருட்களையும் எடுத்துச் சென்றுள்ளனர்.  

இந்த சம்பவம் தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் மதுராந்தகம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.