சிலி நாட்டில் நேற்றிரவு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
சிலி நாட்டின் ஆரிகா நகரில் இருந்து 72 கி.மீ. தொலைவில் நேற்றிரவு 9.32 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.1 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்து உள்ளது. இந்நிலநடுக்கத்தின் மையம் 35 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
இந்த நிலநடுக்கம் பொலிவியா சிலி பெரு ஆகிய நாடுகளில் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.