tamilnadu

img

சீனா ரசாயன ஆலை வெடி விபத்தில் 4 பேர் பலி

சீனாவில் தனியார் ரசாயன ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பலியாகி உள்ளதாகவும், 6 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள தன்னாட்சி பிராந்தியமான குவாங்சி ஜூவாங்கில் உள்ள யூலின் நகரில் தனியார் ரசாயன ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலையில், திடீரென வெடி விபத்து ஏற்பட்டு, ஆலைக்குள் தீப்பற்றி எரிந்தது. இந்நிலையில், பணியில் இருந்த தொழிலாளர்கள் சிலர் ஆலையை விட்டு வெளியேற முடியாமல் தீயில் சிக்கிக்கொண்டனர். 

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 4 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 3 பேர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.