tamilnadu

img

சிலியில் ரயில் கட்டண உயர்வை எதிர்த்து  போராட்டம்: பலி எண்ணிக்கை 10  ஆக உயர்வு

சிலி நாட்டில் ரயில் கட்டண உயர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீது காவல் துறையினர் நடத்திய தாக்குதலில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
மத்திய அமெரிக்க நாடான சிலியில் கடந்த அக்டோபர் 6ம் தேதி மெட்ரோ ரயில் கட்டணத்தை 800முதல் 830 சிலி பெசோக்கள் வரை அரசாங்கம் உயர்த்தியது. அரசின் ரயில் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த வெள்ளியன்று சாண்டியாகோ மற்றும் பிற நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இந்நிலையில் கடந்த வெள்ளியன்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைக்க சாண்டியாகோ சாகபுகோ மாகாணங்களில் புவெண்ட் ஆல்டோ மற்றும் சான் பெர்னார்டோவின் பெருநகர நகராட்சிகளிலும் படையினர் நிறுத்தப்பட்டனர்.  இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 
இந்நிலையில் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்களை ஒடுக்க சனிக்கிழமை பாதுகாப்பு படையினர் பீரங்கிகளை பிரயோகித்தனர். எனினும் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின்போது நடந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. 
தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டம் காரணமாக சிலியில் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.