அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சார்பில் முழு நேர வேலை பணியாளராக்குதல், மருத்துவக்காப்பீட்டு வசதி மற்றும் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தின் 13 ஆவது கோட்ட மாநாடு நடைபெற்றது. அப்போது முழு நேர வேலை பணியாளராக்குதல், மருத்துவக்காப்பீட்டு வசதி செய்து கொடுத்தல் மற்றும் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தினை AIGDSU வின் தலைவர் எஸ்.எஸ். மகாதேவன் தொடங்கிவைத்தார்.