tamilnadu

சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது

சென்னை,ஜூலை 26 சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு தண்ணீர் வராவிட்டாலும் இப்போது பெய்துள்ள மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமி ழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திரு வள்ளூர், விழுப்புரம் உள்பட வட  மாவட்டங்களில் தினமும் இரவு நேரங்களில் மழை பெய்கிறது. வியா ழனன்று (ஜூலை 25) இரவும் விடிய விடிய மழை பெய்தது. எழும்பூர், பாரி முனை, திருவொற்றியூர், வண்ணா ரப்பேட்டை, மணலி, பாடி, அண்ணா நகர், அம்பத்தூர், முகப்பேர், கோயம்பேடு, வடபழனி, கிண்டி, மீனம்பாக்கம், குரோம்பேட்டை, தாம்  பரம், மேடவாக்கம், கூடுவாஞ்சேரி உள்பட பல இடங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்தது. நள்ளிரவு சுமார் 1 மணிநேரம் பலத்த மழை பெய்ததால் சாலை களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி யது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர்  தேங்கி நின்றது. இன்று அதிகாலை 5 மணிவரை தூரல் விழுந்த வண்ணம்  இருந்தது.தரை ஈரத்துடன் காணப் படுவதால் வெப்பம் முழுவதுமாக தணிந்துள்ளது. நேற்றிரவு நுங்கம் பாக்கத்தில் 3 செ.மீ மழை பதிவாகி உள்ளது.சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தாலும் சென் னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி,  புழல், செம்பரம்பாக்கம், சோழவரம்  ஏரிகளுக்கு தண்ணீர் கூட வர வில்லை. இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறுகையில், கடந்த 6 மாதமாக நிலவிய கடும் வெப்பம் காரணமாக மழை நீர்  அனைத்தையும் வறண்ட நிலையில் உள்ள தரை உறிஞ்சி விடுகிறது. இதனால் மழைநீர் வேகமாக வந்தா லும் அடுத்த சில நிமிடங்களில் தரைக்  குள் சென்று விடுகிறது. இதனால் பூண்டி, புழல், சோழ வரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் தொடர்ந்து வறண்ட நிலையில் தான்  உள்ளது. பூண்டி ஏரியில் மட்டும் ஏற்கனவே தேக்கி வைக்கப்பட்டுள்ள 16 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. இன்னும் சில நாட்கள் தொடர்ந்து மழை பெய்தால்தான் ஏரிகளுக்கு தண்ணீர் வர வாய்ப்பு உண்டு என்றனர். சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு தண்ணீர் வராவிட்டாலும் இப்போது பெய்துள்ள மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது என்று குடி நீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறி னார். மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து வீடு வீடாக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருவதின்  பலனாக நிறைய வீடுகளில் மழை நீரை சேகரித்து பூமிக்குள் விடு கிறார்கள். கிணறு வைத்திருப்ப வர்கள் மழை தண்ணீரை கிணற்றில் விடுகின்றனர். இதன்காரணமாக நிலத்தடி நீர்மட்டம் 5 அடிக்கு உயர்ந்துள்ளது என்றார் அவர்.