கீழடியில் நடைபெற்று வரும் 8ம் கட்ட அகழ்வாய்வில் செங்கல் கட்டிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருப்புவனம் அருகே கீழடியில் தற்போது 8ம் கட்ட அகழ்வாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பாசிமணிகள் பானை ஓடுகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கண்டிறியப்பட்ட நிலையில் தற்போது செங்கல் கற்களால் செய்யப்பட்ட கட்டிடம் கண்டறியப்பட்டது. சமீபத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்கள் பயன்படுத்திய மனிதமுகம் போன்ற உருவம் கொண்ட சுடுமண் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழக தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த சுடுமண் சிற்பம் குறித்து அழகர் மலை அழகா, இந்த சிலை அழகா என குறிப்பிட்டுள்ளார்.