tamilnadu

img

சிஐடியு கிளை துவக்க விழா

திருச்சிராப்பள்ளி: திருச்சி அரியமங்கலம் உக்கடை பகுதியில் சிஐடியு ஆட்டோ ஊழியர் சங்கத்தின் புதிய கிளை துவக்க விழா திங்களன்று நடைபெற்றது.  விழாவிற்கு ஆட்டோ சங்க காட்டூர் பகுதி செயலாளர் சார்லஸ் தலைமை வகித்தார். சங்க கொடியை மாவட்டத் தலைவர் சந்திரன் ஏற்றினார். சங்க பெயர் பலகையை மாவட்டப் பொருளாளர் அன்புசெல்வம் திறந்து வைத்தார். மாவட்ட துணைத்தலைவர் ஜெயபால் சிறப்புரையாற்றினார்.  பகுதிக்குழு தலைவர் சரவணன், உறுப்பினர்கள் சக்திவேல், நிஜாமுதீன், காட்டூர் ஒருங்கிணைப்பாளர் பாலு, சிபிஎம் காட்டூர் இடைக்கமிட்டி செயலாளர் மணிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.