திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியில் புதிய ஆட்டோ கிளை துவக்க விழா கிளைத் தலைவர் பி.மனோகரன் தலைமையில் வெள்ளியன்று (மார்ச் 13) நடைபெற்றது. சிஐடியு மாநில துணைத் தலைவர் எஸ்.கே.மகேத்திரன் சங்கக் கொடியை ஏற்றினார். மாநில செயல் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம் பெயர் பலகையை திறந்து வைத்தார். இதில் மாவட்டச் செயலாளர் எம்.சந்திரசேகரன், துணைச் செயலாளர் ஜி.சங்கர்தாஸ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஸ்ரீதர், விஜயகுமார், பூவை பகுதி முறைசாரா செயலாளர் ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். புதிய தலைவராக பி.மனோகரன், செயலாளராக ஜி.எல்.மதன், பொருளாளராக சுதாகர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.