சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தாலுகா ஒய்யவந் தான் கிராமத்தில் நான்கு தலித் குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து வன்கொடுமை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் சிவகங்கை காவல்துணைக் கண் காணிப்பாளர், சிவகங்கை கோட்டாட்சியரிடம் புகார் அளிக்கப்பட் டுள்ளது.கட்சியின் சிவகங்கை மாவட் டச் செயலாளர் வீரபாண்டி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் முத்துராமலிங்க பூபதி, காளையார்கோவில் ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைப் பொதுச் செயலாளர் கந்தசாமி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் தென்னரசு, மாணவர் சங்கமாவட்டச் செயலாளர் ராமகிருஷ்ணன், முத்து, கணேசன் ஆகியோர் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-
ஒய்யவந்தான் கிராமத்தில் நான்கு தலித் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ளமேல்நிலை தண்ணீர் தொட்டி ஆப்பரேட்டராக பணியாற்றும் கணேசன் என்பவருக்கும் அவருடைய தம்பி சீனிவாசனுக்கும் பைப் அமைப்பதில் பிரச்சனை ஏற்பட் டுள்ளது. பைப் அமைக்கும் பணியை காஞ்சி பட்டி ஊராட்சித் தலைவரின் அனுமதி பெற்று செய்துவருவதாக கணேசன் கூறியிருக் கிறார். இப்பிரச்சனையில் தலையிட்ட ஒய்யவந்தான் நாட்டாமைநடராஜன், சக்தி ஆகியோர் பைப்பைஅகற்ற வேண்டுமென கணேசனுக்கு உத்தரவிட்டுள்ளனர். இந்தப் பிரச்சனை ஒரு வார காலமாக இருந்துள்ளது. பிரச் சனை பெரிதான நிலையில் ஊர் நாட்டாமை நடராஜன் தலித் கணேசனை அடித்துள்ளார். இதை கணேசனின் அண்ணன் முத்து ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அப்போது சக்தி என்பவர் கையில்செருப்பை எடுத்துக் கொண்டுமுத்துவை நோக்கி சென்று ஜாதியை சொல்லி திட்டியிருக்கிறார்.
இதையடுத்து காளையார் கோவில் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. காவல் துறையினர் இரு தரப்பையும் அழைத்து சமாதானம் பேசிஅனுப்பிவிட்டனர். இதன்பின்புகிராமக் கூட்டம் நடைபெற்றுள் ளது. அப்போது தலித் குடும் பத்தைச் சேர்ந்த கணேசன், முத்துஉள்ளிட்ட நான்கு குடும்பங்களைஊரைவிட்டு ஒதுக்கி வைப்பதாக முடிவு செய்துள்ளனர். எந்தப்பொருளும் கொடுக்கக் கூடாது.கொடுத்தால் ரூபாய் 5000 அபராதம் என்றும் நான்கு குடும்பங்களுக்கும் கிராமத்தில் வேலைவாய்ப்பு கொடுக்ககூடாதென்றும் தீர்மானித்துள்ளனர். முத்து மனைவி வேலைக்குச் சென்ற போது வேலை கொடுத்தால் 5,000அபராதம் விதிப்பதாகக் கூறியதால் வேலை தர மறுத்து விட்டனர். காவல் நிலையத்தில் புகார்செய்ததற்காக ஊரை விட்டு ஒதுக்கி வன்கொடுமை செய்துவரும் நாட்டாமை நடராஜன் உள்ளிட்டவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.