சிஐடியு ஆர்ப்பாட்டம்
கோவை, ஆக. 4- கொரோனா பேரிடர் காலத்தில் பல்வேறு இடர்பாடுகளை சந் தித்து பணியாற்றும் டாஸ்மாக் ஊழி யர்களுக்கு சிறப்பு ஊதியமாக ரூ.7 ஆயிரத்து 500 வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்த டாஸ்மாக் ஊழியர் களுக்கு உடனடியாக ரூ.50 லட்சம் குடும்பப் பாதுகாப்பு நிதியாக வழங்க வேண்டும். உயிரிழந்த ஊழியரது குடும்பத்தாருக்கு கல்வித் தகுதி அடிப்படையில் வாரிசு வேலை வழங்க வேண் டும். அனைத்து டாஸ்மாக் ஊழியர் களுக்கும் உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்திட வேண்டும். தரமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிட வேண்டும். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் ஊழியர்களை நிர்வாகம் சார்பில் மருத்துவ சிகிச்சை அளிக்கப் பட வேண்டும். ஆய்வு என்ற பெய ரில் நடக்கும் அதிகாரிகளின் பணப்பறிப்பு நடவடிக்கைகளை தடுத்திட வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி சிஐடியு டாஸ்மாக் ஊழியர் கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். கோவை பீளமேடு டாஸ் மாக் மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எஸ்.மூர்த்தி தலைமை வகித்தார். இதில், மாவட் டச் செயலாளர் ஜான் அந்தோனி ராஜ், பொருளாளர் ராமகிருஷ் ணன், மாநிலக்குழு உறுப்பினர் செந்தில்பிரபு உள்ளிட்ட திராளான டாஸ்மாக் ஊழியர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
நீலகிரி
நீலகிரி மாவட்டம், உதகையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் ஊழியர் சம்மேளன மாநில துணைத் தலைவர் ஜெ.ஆல் தொரை, சம்மேளனக் குழு உறுப் பினர் ஏ.நவீன் சந்திரன், நீலகிரி மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் பி.ம கேஷ், பொருளாளர் பி.சிவகுமார், துணைத் தலைவர் எம்.எம்.சேனாதி, துணைச் செயலாளர் எச்.எம்.தியாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.