3000 மாணவ, மாணவியர் பங்கேற்பு
திருச்சிராப்பள்ளி, நவ.3- சிஐடியு தொழிற்சங்கத்தின் 50 ம் ஆண்டு பொன் விழாவை முன்னிட்டு பெல் சிஐடியு சங்கம் சார்பில் மாணவ – மாணவியருக்கு வண்ணம் தீட்டுதல், ஓவியம், கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஞாயிறு அன்று திருவெறும்பூரில் உள்ள ஆர்எஸ்கே பள்ளியில் நடை பெற்றது. இதில் எல்கேஜி முதல் 3ம் வகுப்பு வரை வண்ணம் தீட்டுதல், 4 முதல் 5ம் வகுப்பு வரை ஓவியம் வரைதல், 6 ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உலகை நான் எவ்வாறு வரையறுப்பேன்? என் குடும்பம் எனக்கு என்ன கற்பித்தது என்ற தலைப்பிலும், 9ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை சமூக ஊடகங்கள் என் பார்வையில், கீழடியில் தமிழர் நாகரீகம் என்ற தலைப்பிலும், 11ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு என்ன செய்ய வேண்டும், குடும்பத்தில் பெண்களின் முக்கியத்துவம் என்ற தலைப்பிலும் கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் 3000-த்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற முதல் 3 பேருக்கு கேட யம், பதக்கம், சான்றிதழ்களும் மேலும் 10 ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. மேலும் போட்டியில் பங் கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இப்போட்டி களை வாழ்த்தி சிஐடியு திருச்சி புற நகர் மாவட்ட செயலாளர் சிவராஜன், முன்னாள் செயலாளர்கள் குலசேகரன், ராமசாமி, கருப்பன், சம்பத், வெங்கிடு, இமானுவேல் ஆகியோர் பேசினர். போட்டிக்கான ஏற்பாடுகளை பெல் சிஐடியு பொதுச்செயலாளர் பிரபு, துணை செயலாளர் மோகன்ராஜ், செய லாளர் பரமசிவம், துணைத் தலை வர்கள் அருள்மொழி, முருகேசன், பொருளாளர் பெரியசாமி, அமைப்பு செயலாளர் ராஜேஷ்கண்ணா மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.