திருப்பூர், ஆக. 11- திருப்பூர் மாநகராட்சி முதலாவது மண்டலத்தில் துய்மைப் பணியாளராக பணி யாற்றி வருபவர் ஆறுமுகம் (47). இவருக்கு மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவரும் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றுத் தாக்குதல் உறுதி செய்யப்பட்ட நிலையில் ஆறுமுகம் திருப்பூர் அரசு மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பல னின்றி திங்களன்று உயிரிழந்தார். மாநக ராட்சி தூய்மைப் பணியாளர் கொரோனா தடுப்பு முன்களப் பணியாற்றி வந்த நிலை யில் உயிரிழந்திருப்பதால், தமிழக அரசு அறி வித்தபடி, கொரோனா தொற்றால் இறந்து போன ஆறுமுகம் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கும்படி சிஐடியு திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.ரங்க ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.