tamilnadu

img

சிங்கம், புலிக் குட்டிகளுக்கு பெயர் சூட்டிய முதலமைச்சர்

சென்னை, ஆக. 10- வண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிதாகப் பிறந்  துள்ள 3 சிங்கக் குட்டி களுக்கும், 4 புலிக்குட்டி களுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயர் சூட்டினார்.  வண்டலூர் உயிரியல் பூங்காவில், ஒரு ஆண் மற்றும் இரு பெண் சிங்கக்  குட்டிகள் புதிதாகப் பிறந்துள்  ளன. அதேபோல் இரு ஜோடி புலிகளுக்கு 2 ஆண்  மற்றும் 2 பெண் புலிக் குட்டி கள் பிறந்துள்ளன. வண்ட லூர் உயிரியல் பூங்காவில் சனிக்கிழமையன்று(ஆக.10) நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆண் சிங்கக் குட்டிக்கு, பிரதீப் என்றும், இரு பெண் சிங்கக் குட்டிகளுக்கு தஷ்னா, நிரஞ்சனா என்றும்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயர் சூட்டி னார். அதேபோல் இரு பெண்  புலிக்குட்டிகளுக்கு வெண் மதி, யுகா என்றும், 2 ஆண்  குட்டிகளுக்கு மித்ரன், ரித்விக் என்றும் முதலமைச் சர் பெயர் சூட்டினார்.  இதை அடுத்து காண்டாமிருக இருப்பிடத்தை மக்கள்  பார்வைக்காக முதலமைச்சர் திறந்து வைத்தார்.  பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள சஞ்சய் காந்தி பூங்காவில் இருந்து பெண் காண்டாமிருகம் கொண்டு வரப்பட உள்ள தாகத் தெரிவித்தார்.