tamilnadu

img

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து- 8 பேர் பலி

சாத்தூர் அருகே நடந்த பட்டாசு ஆலை தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. 
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சன் குளத்தில் விஜயகரிசல்குளத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவருக்கு சொந்தமான மாரியம்மாள் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. அங்கு இன்று வழக்கம்போல் பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த போது வேதிப்பொருள் உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்தில் சம்பவ இடத்திலேயே 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போதைய சூழலில் 25 பேர் சாத்தூர் அரசு மருத்துவமனையிலும் 6 பேர் சிவகாசி மருத்துவமனையிலும் 3 பேர் கோவில்பட்டி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  மேலும் பலர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 

விபத்துக்கான காரணம் குறித்து மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்.


 

;