tamilnadu

குழந்தைகளை கடத்தி கொலை செய்வது மனித தன்மையற்ற செயல் சத்யார்த்தி வேதனை

சண்டிகர், செப்.12- குழந்தை கடத்தல், குழந்தைகள் கொலை செய்யப்படுவது சட்ட விரோதமானது, நெறிமுறையற்றது, மனிதத் தன்மையற்றது மற்றும் நீதியற்ற  செயலாகும் என நோபல் பரிசு பெற்றவரும் குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளருமாகிய கைலாஷ் சத்யார்த்தி தெரிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு வழங்கப்படவுள்ளது. இதற்காக தேசிய வேளாண்-உணவு உயிரி தொழில்நுட்ப நிறுவனம் நடத்திய கருத்தரங்கில் கைலாஷ் சத்யார்த்தி மேலும் பேசியதாவது: குழந்தையை தூக்கிச் சென்றுவிட்டு வருகிறேன் என்ற பெயரில் கடத்தல் காரர்கள் பலர் உள்ளனர். இச்சம யத்தில் அருகில் இருப்பவர்கள் உடனடி யாக காவல்நிலையத்தில் புகார் அளிக்க வேண்டுமே தவிர, சட்டத்தை அவர்கள் கையில் எடுக்கக் கூடாது.  குழந்தைகளை கடத்துவது என்ற போர்வையில், அந்த பிஞ்சுகள் கொலை செய்யப்படுகின்றனர். இந்த கடத்தல் தொடர்பான அனைத்தும் காவல் நிலையங்களில் புகார் செய்யப்படுவதில்லை. சில நேரங்களில் உணர்ச்சிகள், சென்டிமென்டுகள், வெளிப்பாடுகள் கூட வன்முறையா கின்றன. இந்தியாவில் ஒரு மணி நேரத்திற்கு எட்டு குழந்தைகள் காணா மல் போவதாக தேசிய குற்றப் பதிவு கழகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை மேலும்  அதிகரிக்க வாய்ப்புள்ளது. குழந்தைகள் காணாமல் போகவில்லை. அவர்கள் கடத்தப்பட்டு, கொத்தடிமை, விபச்சா ரம், உடலுறுப்புகள் விற்பனை, பிச்சை எடுக்க வைப்பது போன்ற பல்வேறு துன்பங்களுக்கு ஆளாக்கப் படுகின்றனர். இது நாட்டின் மிக முக்கியப் பிரச்சனை. சண்டிகர் அல்லது மோஹாலி பகுதியில் ஒரு குழந்தை பிச்சை எடுத்துக் கொண்டிருந்தால், அந்தக் குழந்தை உள்ளூரை/அப்பகுதியைச் சேர்ந்தது அல்ல. அக்குழந்தைகள் பீகார், ஜார்க்கண்ட், ஒரிசா உட்பட இந்தியாவில் பல பகுதிகளிலிருந்து கடத்தி வரப்பட்டவர்கள். கடத்தல் காரர்கள் குழந்தைகளை கடத்தி வந்து, உள்ளூர் ஏஜெண்டுகளிடம் அவர்களை விற்று விடுகின்றனர்.  “கடத்தப்பட்டு கொலை செய்யப்படு வதற்கு யாரும் ஆதரவு தரவில்லை. யாராவது குழந்தையை தூக்கிச் சென்று வருகிறேன் எனக் கூறுவதில், உங்களுக்கு ஏதேனும் சிறு  சந்தேகம் இருந்தாலும், உடனடியாக போலீசாரை அழையுங்கள். இதுபோன்ற செயல்கள் சட்டவிரோத மானது, அரசியலமைப்பிற்கு எதிரானது மற்றும் மனிதத் தன்மை யற்றது”.  பொது மக்கள் வெளிப்படுத்தும் கோபம் நியாயமானது. ஆனால், அது வன்முறையாக மாறக் கூடாது. கோபத்திலிருந்து வெளிப்படும் ஆற்றலை, மோதல்களை/ பிரச்சனை களை தீர்ப்பதற்கு பயன்படுத்த வேண்டும். நான் கோபத்திற்கு ஆதரவு தருகிறேன். ஆனால், என்னுடைய கோபம் பழிவாங்குவதற்காக அல்ல. அமைதியை நிலைநாட்டுவதற்கு மக்கள் கோபப்பட வேண்டும் என நான் நினைக்கிறேன். இது வன்முறையாக மாறக் கூடாது. இவ்வாறு கைலாஷ் சத்யார்த்தி பேசினார்.