tamilnadu

img

பாலியல் வன்முறை குறித்து புகாரளித்த பெண்ணிற்கு அபராதம் விதித்த கிராமப்பஞ்சாயத்து

சத்திஸ்கர் மாநிலத்தில் பாலியல் பாலத்காரம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த பெண்ணிற்கு கிராமப்பஞ்சாயத்து அபராதம் விதித்த அவலம் நிகழ்ந்துள்ளது. 
சத்தீஸ்கர் மாநிலம் ஜாஸ்பூர் மாவட்டத்துக்குட்பட்ட கிராமத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் கடந்த 4-ந்தேதி தனது மூத்த சகோதரர்களுடன் சண்டையிட்டுள்ளார். 
பின்னர் வீட்டை விட்டு வெளியேறி இரவு நேரத்தில் உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கினார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சந்தீப் மற்றும் கிஷோர் ஆகியோருடன் பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அவர்களிடம் இளம்பெண் தனக்கு ஒரு வேலை வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு சந்தீப், கிஷோர் ஆகிய இருவரும் கூலி வேலை இருப்பதாக கூறி ஒரு கட்டுமான தளத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர். 
இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  இதையடுத்து சந்தீப், கிஷோர் ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். 
இந்நிலையில் ஊர்பஞ்சாயத்தில் பாலியல் பலாத்காரம் குறித்த காவல்துறையில் புகார் அளித்தால் கிராமத்திற்கு அவமானம் ஏற்பட்டதாக கூறி பாதிக்கப்பட்ட பெண்ணிற்கே ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு குற்றவாளிகள் இருவரும் தலா ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.