‘உலக சுற்றுச்சூழல் தினம் - 2025’
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் (AEC&RI) சார்பில், உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. “பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்கு கொண்டு வருவது” என்ற உலகளாவிய கருத்தியலை முன்வைத்து நடைபெற்ற வெள்ளியன்று இந்நிகழ்வில் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.