‘சுற்றுச்சூழல் தினம்: விதொச பேரணி’
தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், செல்லம்பட்டி பஞ்சாயத்து, கீழானூர் கிராமத்தில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, புதனன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.முத்து, ஒன்றியக்குழு உறுப்பினர் சி.தேசிங்குராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.