tamilnadu

img

பாப்பிரெட்டிப்பட்டியில் வேளாண் கல்லூரி அமைக்க வாலிபர் சங்கம் வலியுறுத்தல்

பாப்பிரெட்டிப்பட்டியில் வேளாண் கல்லூரி அமைக்க வாலிபர் சங்கம் வலியுறுத்தல்

தருமபுரி, ஜூன் 28- பாப்பிரெட்டிப்பட்டியில் அரசு வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும் என  வாலிபர் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப் பட்டி வட்ட மாநாடு, வட்டத் தலைவர் பி.கும ரேசன் தலைமையில் சனியன்று பாப்பி ரெட்டிபட்டியில் நடைபெற்றது. துணைத் தலைவர் செ.கார்த்திக் வரவேற்றார். மாவட்ட துணைச்செயலாளர் கே.கோவிந்தசாமி துவக்கவுரையாற்றினார். வட்டச் செயலா ளர் சே.குப்பன் அறிக்கையை முன்வைத்தார். மாவட்டச் செயலாளர் எம்.அருள்குமார், மாவட்டப் பொருளாளர் சிலம்பரசன் ஆகி யோர் சிறப்புரையாற்றினர். இம்மாநாட்டில், பாப்பிரெட்டிப்பட்டியில் அரசு வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும். அரசு மர வள்ளிக்கிழங்கு சிட்கோ தொழிற்சாலை அமைத்து, உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். பொம் மிடி ரயில் நிலையம் வழியாக செல்லும் விரைவு ரயில்களை பயணிகளின் வசதிக் காக நின்று செல்ல நடவடிக்கை எடுக்க  வேண்டும். கடத்தூர் பேரூராட்சி திடக்கழிவு களை சுத்திகரிப்பு நிலையம் அமைத்து மறு சுழற்சி செய்ய வேண்டும். பாப்பிரெட்டிப் பட்டி, பொம்மிடி, கடத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் தூய்மைப்பணியாளர்கள், செவிலியர்கள் பற்றாக்குறையை நிரப்ப வேண்டும். தீண் டாமை கொடுமைகளை தடுக்க வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் வட்டத் தலைவராக குப்பன், செயலாளராக இராகப் பிரியா, பொருளாளராக கார்த்திகேயன், துணைத்தலைவர்களாக கண்ணன், ஐஸ் வர்யா, துணைச்செயலாளர்களாக இராஜேஸ்வரி, வினோத் உட்பட 15 பேர் கொண்ட வட்டக்குழு தேர்வு செய்யப் பட்டது. முடிவில், இராகப்பிரியா நன்றி கூறி னார்.