பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்களுக்கான பயிலரங்கம்
சேலம், ஜூன் 28- பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் களுக்கான புத்தகாக்கப் பயிலரங்கம் சேலத் தில் நடைபெற்றது. இதில் 400க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசின் தொழில்நுட்பக் கல் வித்துறை ஆணையரகம் சார்பில், ‘திறன் வாய்ந்த பட்டயப் பொறியாளர்களை உரு வாக்கும் கற்பித்தல் முறை’ என்ற தலைப்பில் பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்களுக் கான புத்தாக்கப் பயிலரங்கம் வியாழனன்று நடைபெற்றது. சேலம் அரசு பொறியியல் கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் நடை பெற்ற இந்நிகழ்வில், அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் வி.கீதா வரவேற்றார். பயிலரங்கை தொழில்நுட்பக் கல்வித்துறை ஆணையர் ஜெ.இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்து பேசுகையில், தொழில் துறையில் பட்டயப் பொறியாளர்களின் தேவை அதிகரித்து வருகிறது. இதை பூர்த்தி செய்யும் வகையில் திறன்வாய்ந்த இளம் பட்டயப் பொறியாளர்களை உருவாக்குவ தில் ஆசிரியர்கள் முனைப்பு காட்ட வேண் டும். கற்பித்தல் முறையை மேம்படுத்தி செயல்வழிக் கற்றலையும், தன்முனைப்பு டன் மாணவர்களின் கற்கும் திறனை மேம் படுத்துவதிலும் கவனம் செலுத்தும் வகை யில் பாலிடெக்னிக் கல்லூரிகளின் கற்றல் முறையில் மாற்றம் கொண்டுவர திட்டமிடப் பட்டுள்ளது. இதன்ஒரு பகுதியாக அரசு பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியா வில் 21 நாள் களப்பயிற்சியும், மூன்று மாதத் துக்கு ஆன்லைன் பயிற்சியும் அளிக்கப் பட்டுள்ளது. பயிற்சிபெற்ற ஆசிரியர்களைக் கொண்டு தமிழ்நாட்டிலுள்ள 55 அரசு பாலி டெக்னிக் கல்லூரிகளைச் சேர்ந்த ஆசிரி யர்களுக்கு திருநெல்வேலி, திருச்சி, சேலம் மற்றும் சென்னை மண்டலத்தில் பயிற்சி வழங் கப்பட்டுள்ளது. இதன்மூலம், செயல்வழிக் கற்றல், திறன் சாா்ந்த வகுப்பறைகளை உரு வாக்க அரசு திட்டமிட்டுள்ளது, என்றார். இந்த பயிலரங்கில் சேலம், கோவை, கரூர், நீலகிரி, தேனி, தருமபுரி, கிருஷ்ண கிரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையா ளர்கள் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.