tamilnadu

img

வருமானம் இன்றி அல்லல்படும் ‘கோரைப்பாய்’ தொழிலாளர்கள்

திருவண்ணாமலை, ஏப். 22- திருவண்ணாமலை மாவட்  டம் ஆரணியை அடுத்த குண் ணத்தூர் கிராமத்தில் கோரைப் பாய்களை தயாரிக்கும் 15 க்கும்  மேற்பட்ட தொழிற் சாலைகள் உள்ளன. அங்கு, நாள் ஒன்றுக்கு  ரூ.50 ஆயிரம் மதிப்பிலான கோரைப்பாய்கள் தயாரிக் கப்பட்டு தமிழகத்தின் பல்வேறு  பகுதிகளுக்கும், ஆந்திர மாநி லத்துக்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன.

சைக்கிளில் பாய் விற்பனை செய்பவர்கள் 50 க்கும் மேற்பட்  டோர் இக்கிராமத்தில் உள்ள னர். கோரைப் பாய் தொழிற் சாலையை நம்பி 200 க்கும் மேற்  பட்ட குடும்பங்கள் உள்ளனர். தற்போது கொரோனா ஊரடங்கால் வாகனப் போக்கு வரத்து இல்லை. இதனால் பாய்கள் தயாரிப்புக்கான கோரை, நூல் சாயமேற்றுதல் ஆகியவைகள் வெளியிடங்க ளில் இருந்து வர வேண்டி உள்  ளது. அவைகள் வராததால் கோரைப்பாய்கள் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வரும்  300க்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் வேலை வாய்ப்பை இழந்து அன்றாட பிழைப்பை நடத்த முடியாமல் தவித்து வரு கின்றனர்.

தயாரிக்கப்பட்ட பாய் களை விற்பனைக்கு அனுப்ப  முடியாமல் தவித்து வருகின்ற னர். பாய் தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வருபவர்களில்  ஒரு சிலர் மட்டுமே அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரி யத்தில் தங்களின் பெயரை பதிவு செய்துள்ளனர். அதிலும் ஒருசிலர் தங்களின் பதிவைப் புதுப்பிக்காமல் உள்ளனர். அரசு அறிவித்துள்ள நிவாரண நிதி ரூ.1000 தங்களுக்கும் கிடைக்குமா? என பாய் தயா ரிப்பு தொழிலாளர்கள் எதிர்பார்க்  கின்றனர்.

அதேபோல் வேட்டவலத்தை அடுத்த ஆர் கிராமத்திலும் கோரைப்பாய்கள் தயாரிக் கப்படுகின்றன. ஆகூரில் 250க்கும் மேற்பட்ட தொழிற் சாலைகள் உள்ளன. அதில் 350-க்கும் மேற்பட்ட எந்திரங் கள் மூலம் கோரைப்பாய்கள் தயாரிக்கப்படுகின்றன. கோரைப்  பாய் தொழிலில் கோரை தரம் பிரித்தல், சாயம் போடுதல், பாய்  ஓரம் நாடா அடித்தல் எனப்  பல்வேறு பணிகளில் நேரடியாக,  மறைமுகமாக 1,500 மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

நாள் ஒன்றுக்கு 5 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட கோரைப் பாய்கள் தயாரிக்கப்படுகின்றன. தயாரிக்கப்பட்ட கோரைப் பாய்  கள் விழுப்புரம், புதுச்சேரி, கட லூர், திருவாரூர், கும்பகோணம், வேலூர், சேலம் ஆகிய மாவட்  டங்களுக்கு லாரிகளில் அனுப்பி  வைக்கப்படுகின்றன. தற்போது அமலில் உள்ள ஊரடங்கால் கோரைப்பாய் தயாரிப்பு பாதிக்  கப்பட்டுள்ளது. இதனால் தொழி லாளர்கள் ஒரு மாதமாக வேலை வாய்ப்பை இழந்து வீட்டி லேயே முடங்கி உள்ளனர்.

ஊரடங்குக்கு முன்பே தயா ரிக்கப்பட்ட கோரைப் பாய்களை  வெளிமாவட்டங்களுக்கு அனுப் பாமல் 2 லட்சத்துக்கு மேற்பட்ட கோரைப்பாய்கள் குடோனில் தேக்கமடைந்துள்ளன. இத னால் தயாரிப்பாளர்களும், வியா பாரிகளும் கவலையில் உள்ள னர். கோரைப்பாய் தயாரிப்பில்  ஈடுபட்டுள்ள தொழிலாளர்க ளுக்கு தினமும் ரூ.400-லிருந்து ரூ.500 வரை வருமானம் கிடைத்து வந்தது. கடந்த ஒரு மாதமாக வேலை வாய்ப்பு இல்லாததால் வருமானத்துக்கே வழியில்லாமல் தவித்து வரு கின்றனர். எனவே கோரைப்பாய்  தயாரிக்கும் தொழிலாளர்க ளுக்கு நிவாரண உதவியை வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

;