மார்க்சிஸ்ட கம்யூ னிஸ்ட கட்சியின் ஊழிய ரும், தீக்கதிர் முகவராக வுமான ஏ.பாலசுந்தரம் (64) வியாழனன்று உடல் நலக்குறைவு காரண மாக காலமானார். 1980களின் இறுதி யில் தீக்கதிரின் முகவ ராக தனது பணியினை துவங்கிய பாலசுந்தரம், இறுதி வரையிலும் இப்பணியினை தொடர்ந்து மேற் கொண்டு வந்தார். துவக்க காலத்தில் கோவை ரயில் நிலையத்தில் துவங்கி, சூலூர் வரையில் சுமார் 60 கிலோமீட்டர் தூரம் வரை தினசரி தீக்க திரை விநியோகித்து வந்தார். பின்னர் பகுதி வாரியாக புதிய முகவர்கள் விநியோகத்தில் ஈடு பட்டதால் இருகூர் வட்டார அளவில் தீக்கதிரையும், இதர பத்திரிக்கைகளையும் விநியோகித்து வந் தார். சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தீக்கதி ரோடு தன்னை இணைத்துக்கொண்டு செயல்பட்ட வர், ‘தீக்கதிர் பாலு’ என கட்சியினரால் அன் போடு அழைக்கப்பட்டு வந்த நிலையில், வியாழ னன்று இருகூரிலுள்ள தனது இல்லத்தில் உடல் நலக்குறைவு காரணமாக வியாழனன்று உயி ரிழந்தார். இவரது மறைவு செய்தியறிந்தவுடன் மார்க் சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் சி.பத்மநான், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் அஜய்குமார், தெய்வேந்திரன், ஒன்றியச் செய லாளர் சந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் மூர்த்தி, ஸ்டாலின்குமார், தீக்கதிர் விநியோக மேலா ளர் நெல்சன்பாபு. மூத்த தோழர் என்.ஜெயபாலன், இருகூர் கிளைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள் ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். மறைந்த தோழர் பாலசுந்தரத்திற்கு மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.