பாரதிபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி துவக்கம்
தருமபுரி, செப்.27- பாரதிபுரம் - வெண்ணாம்பட்டி இடையே ரூ.37.84 கோடியில் அமையவுள்ள ரயில்வே மேம்பாலப் பணிகள் வெள்ளியன்று துவங்கிய தால், போக்குவரத்து நெரிசல் இனி குறையும் என வாகன ஓட்டிகள் நம் பிக்கை தெரிவித்தனர். தருமபுரி ரயில் நிலையம் அருகே வெண்ணாம்பட்டிக்கு செல்லும் பிர தான சாலையில் ரயில்வே கேட் உள் ளது. இப்பகுதியில் நாளொன்றுக்கு சுமார் 36 முறை ரயில்களுக்காக இந்த கேட் பூட்டப்படுகிறது. ஒவ் வொரு முறையும் கேட் பூட்டப் பட்டு திறக்க சில நிமிடங்கள் ஆகி றது. இதனால், அவ்வழியே செல் லும் வாகனங்கள் நீண்ட நேரம் வரி சையில் காத்திருப்பதும், பள்ளி, கல் லூரி மற்றும் அலுவலகங்கள், பணிக் குச் செல்வோர் என அனைத்து தரப் பினரும் பாதிப்புக்குள்ளாகி வரு கின்றனர். எனவே, பாரதிபுரம் - வெண்ணாம்பட்டி ரயில்வே கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொது மக்களும், அரசியல் கட்சியினரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இக்கோரிக்கையை ஏற்று, பாரதி புரம் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க அறிவிக்கப்பட்டது. வெண்ணாம்பட்டி ரயில்வே கேட் டில் பாலம் அமைக்கவும், அதனை யொட்டி அணுகு சாலை அமைக்க வும் போதிய இடம் இல்லாததாலும், சாலையின் இருபுறமும் நெருக்க மாக குடியிருப்புகள் உள்ளதால், பாரதிபுரம் 66 அடி சாலையிலிருந்து வெண்ணாம்பட்டி ஆயுதப்படை மைதான நுழைவு வாயில் வரை பாலம் அமைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. இந்த வழியே மேம் பாலம் அமைப்பதால், நிலம் கைய கப்படுத்துவது உள்ளிட்டவை எளிதா கவும், பாலம் கட்டுமானத்தை விரைந்து மேற்கொள்ள இயலும் எனவும் நெடுஞ்சாலைத்துறை திட் டம் வகுத்து ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்தது. இதற்கு ரயில்வே துறையும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஒப்புதலும் வழங்கியது. இந்நி லையில் புதிய ரயில்வே மேம்பாலம் ரூ.38 கோடி செலவில் அமைக்கப் படுகிறது. இதற்கான பணிகள் வெள் ளியன்று தொடங்கியது. இப்பாலம் மொத்தம் 662 மீட்டர் நீளம், 8.50 மீட்டர் அகலத்தில் அமைக் கப்படுகிறது. இதற்கென 22 தூண்க ளும் அமைக்கப்படுகிறது. இப்பாலப் பணிகள் முடிந்த பின்னர், வெண் ணாம்பட்டி ரயில்வே கேட்டில் போக் குவரத்து நெருக்கடி தீர்வதுடன், புதிய பேருந்து நிலையம் அமைக் கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் நிலை யில், பெங்களூரு தேசிய நெடுஞ்சா லையில் செல்லும் பேருந்துகள், இல குவாக தேசிய நெடுஞ்சாலையிலி ருந்து பழைய பேருந்து நிலையத் துக்கு வந்து செல்லும் என்பது குறிப் பிடத்தக்கது.