வெள்ளை ஈக்கள் தாக்குல்: தென்னை உற்பத்தி பாதிப்பு- பி.ராமகிருஷ்ணன்
வெள்ளை ஈக்கள் மற்றும் பிற நோய் களின் தாக்குதலால் இளநீர் மற்றும் தேங்காய் உற்பத்தி பாதிக்கப்பட்டு, தென்னை விவசாயிகள் கடும் நெருக் கடியை சந்தித்து வருகின்றனர். தென்னை விவசாயிகளைக் காப்பாற்ற தமிழ்நாடு அரசு தீவிர தடுப்பு நடவ டிக்கைகளை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ள னர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியில் சுமார் 29,000 ஹெக்டேர் பரப் பளவில் தென்னை மரங்கள் வளர்க்கப் படுகின்றன. தற்போது, சுமார் 20,000 ஹெக்டேர் தென்னை மரங்கள் வெள்ளை ஈ தாக்குதலால் பாதிக்கப் பட்டுள்ளன. மேலும், 3,000 ஹெக்டேர் தென்னை மரங்கள் வேர் வாடல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. தற் போது வேர் வாடல் நோய் ஓரளவு கட் டுப்படுத்தப்பட்டாலும், வெள்ளை ஈ தாக்குதலால் தேங்காய் உற்பத்தி கடு மையாக பாதிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றங்கள், தவறான விவசாய முறைகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களின் பயன்பாடு குறைவு போன்ற காரணங்களால் தென்னை விவசாயிகள் பாதிக்கப்படு கின்றனர். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தோட்டக் கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை ஆகியவை தென்னை நோய் தாக்கு தல் மற்றும் தேங்காய் சாகுபடி தொடர் பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் போதிய கவனம் செலுத்து வதில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டு கின்றனர். இந்த நிலை தொடர்ந்தால், கோவை மாவட்டம் மட்டுமல்ல, தமி ழகத்தின் பல மாவட்டங்களிலும் தென்னை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும்.
இதுகுறித்து தென்னை விவசாயி களிடம் பேசுகையில், “தேங்காயின் விலை தற்போது ரூ.50 வரை உயர்ந் துள்ளது. ஆனால், வெள்ளை ஈ தாக் குதலால் தென்னை உற்பத்தி 50 சத வீதத்திற்கும் மேல் குறைந்துள்ளதால், எங்களுக்கு எந்த பலனும் இல்லை. காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற சாகு படி முறைகள், பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு, மண் மேலாண்மை மற் றும் நீர்ப்பாசன வசதி மேம்பாடு போன்ற நடவடிக்கைகளை தமிழக அரசு போர்க் கால அடிப்படையில் எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தனர். அரசு முன்முயற்சி எடுத்து ஒருங்கி ணைந்த நோய் தடுப்பு நடவடிக்கை யின் மூலம் வெள்ளை ஈ தாக்குதலை கட் டுப்படுத்த வேண்டும். மேலும், வெள்ளை ஈ தாக்குதலால் பாதிக்கப்பட்ட மரங் களை கணக்கிட்டு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். தமிழ கத்தில் உள்ள நியாய விலைக் கடை களில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெயை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்னை விவசாயிகள் வலியுறுத்தினர். அழிவின் விளிம்பில் உள்ள தென்னை விவசா யத்தை காக்க தமிழக அரசு உடன டியாக நடவடிக்கை வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ள னர்.