tamilnadu

img

கோவை: மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

 செவித்திறன் குறைபாடு உள்ள மாற்று திறனாளிகளுக்கு, ஸ்மார்ட் போன் வழங்குதல் மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான இரு சக்கர வாகனம் ஆகிய நலத்திட்டங்களை பயனாளிகளுக்கு மாற்று திறனாளிகள் நலத்திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர்  நேரில் வழங்கினார்.
பிறவியிலேயே கேட்கும் திறன் இல்லாத,  மற்றும் இடையில்,  செவித்திறன் குறைபாடு, விபத்துகள்,  அல்லது நோயால் பாதிக்கப்பட்டு செவித்திறன் குறைபாடு ஏற்படும்,  மாற்று திறனாளிகள் உரிய சான்றிதழ்களுடன் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.  இவ்வாறு பதிவு செய்யும்  தகுதியுள்ள  மாற்று திறனாளிகளுக்கு  செல்போன் வழங்கப்பட்டு வருகின்றது.  இதன் ஒரு பகுதியாக,  தக்க செயலிகளுடன் கூடிய திறன்பேசி, என்றழைக்கப்படும் ஸ்மார்ட் போன்,  செவித்திறன் குறைபாடு உள்ள  17 மாற்று திறனாளிகளுக்கு, 12,999 ருபாய் வீதம், 17  செல்போன்  செவ்வாயன்று  வழங்கப்பட்டது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் உரிய பயனாளிகளுக்கு நேரில் வழங்கினார்.
இதேபோன்று  முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட  18  மாற்று திறனாளிகளுக்காக  பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டுள்ள  இருசக்கர வாகனங்களை  மாவட்ட  ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ். சமீரன் வழங்கினார்.  தமிழக அரசால்,  முதுகு தண்டுவடம்,  பாதிக்கப்பட்ட மாற்று திறனாளிகளுக்கு,  இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்டு பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட  பெட்ரோல் வண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளிகளுக்கு ரூ. 99 ஆயிரத்து, 777 ,  மதிப்பீட்டில், 18  மாற்று திறனாளிகளுக்கு வழங்கப்பட்டது.  இதற்கான சாவிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ் சமீரன் ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார். இந்நிகழ்வில் மாற்று திறனாளிகள் நல அலுவலர் வசந்தகுமார், கோவை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி செந்தில் அண்ணா மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.