ஜூன் 13 வரை குடிநீர் விநியோகம் நிறுத்தம்
நாமக்கல், ஜூன் 11- ராசிபுரம் நகரில் குடிநீர் குழாய் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், ஜூன் 13 ஆம் தேதி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சி பகுதியில் நீண்ட நாள் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்தும் வகை யில், தமிழக அரசால் ரூ.854 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான 99 சதவிகிதம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. சில தினங்களில் புதிய திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் செய்யப் படவுள்ளது. இதனிடையே, இத்திட்டத்தின்கீழ் குடிநீர் குழாய் களை இணைக்கும் வகையில் ராசிபுரம் பழைய பேருந்து நிலையத்தின் மேல்நிலை நீர்நிலை தேக்கத் தொட்டியின் அருகில் பிரதான வால்வு பொருத்தும் பணிகள் ஜூன் 9 முதல் ஜூன் 13 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனால் ராசிபுரம் - எடப்பாடி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் தற்போது பெறப்படும் குடிநீர் பகிர்மானத்தை நிறுத்தி பணிகள் மேற் கொள்ள அவசியம் ஏற்பட்டுள்ளது. இப்பணிகள் முடிக்கப் பட்டு புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் வாயிலாக ராசிபுரம் நகரப் பொது மக்களுக்கு குடிநீர் தொய்வின்றி வழங்கப்பட உள்ளது. எனவே, ஜூன் 13 ஆம் தேதி வரை குடிநீரை சிக்கன மாகப் பயன்படுத்தி நகராட்சிக்கு பொதுமக்கள் ஒத்து ழைக்க வேண்டும், என நகர்மன்றத் தலைவர் ஆர்.கவிதா சங்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நகைக்காக மூதாட்டி கொலை: 2 பேர் கைது
நாமக்கல், ஜூன் 11- பரமத்திவேலூர் அருகே தனியாக வசித்து வந்த மூதாட்டியை, நகை மற்றும் பணத்திற்காக கொலை செய்த 2 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே உள்ள சித்தம்பூண்டி, குளத்துப் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சாமியாத் தாள் (67). கடந்த ஜூன் 7 ஆம் தேதி இரவு அடை யாளம் தெரியாத நபர்கள் அரிவாளால் தாக்கி யுள்ளனர். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந் நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த ஞாயிறன்று சாமியாத்தாள் உயிரிழந்தார். இதனையடுத்து, இக்குற்றச்சம்பவங்களில் தொடர்புடையவர்களை பிடிக்க 4 தனிப்ப டைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், கரூர் மாவட்டம், குளித் தலை பகுதியில் பதுங்கியிருந்த ஆனந்த் குமார், அஜித்குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், இருவரும் ஈரோடு, தாளம் பாடியைச் சேர்ந்தவர்கள் என்பதும், நகை மற்றும் பணத்திற்காக மூதாட்டியை கொலை செய்ததும் தெரியவந்தது. தொடர்ந்து, சம்ப வம் நடைபெற்ற இடத்திற்கு இருவரையும் அழைத்து சென்று விசாரணை நடத்திய போது, அங்கிருந்த மூதாட்டியின் உறவினர் கள் மற்றும் குடும்பத்தினர், கைது செய்யப் பட்டவர்களின் முகத்தை காட்ட வேண்டும் எனக்கூறி, போலீசாரின் வாகனத்தை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பர பரப்பு ஏற்பட்டது. இதன்பின் அங்கிருந்து கைது செய்யப்பட்டவர்களை காவல் நிலை யத்திற்கு அழைத்து வந்து, நீதிமன்ற காவ லுக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
13 உர விற்பனை நிலையங்களுக்குத் தடை
சேலம், ஜூன் 11- சேலம் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக 13 உர விற்பனை நிலையங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள் ளது. தென்மேற்குப் பருவமழை தொடங்கி யுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பயிர் சாகுபடிக்கான ஏற்பாடுகளை விவசாயி கள் செய்து வருகின்றனர். விவசாயிக ளுக்கு தேவையான உரங்களை இருப்பு வைக்க தனியார் மற்றும் கூட்டுறவு நிறுவ னங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், உரம் இருப்பு வைத்திருப்பதை கண்காணிக்கவும், விநியோகத்தை முறைப் படுத்தவும் அனைத்து மாவட்ட தரக்கட்டுப் பாடு அலுவலர்களுக்கும் உத்தரவிடப் பட்டுள்ளது. அதன்பேரில், சேலம் மாவட்டத் தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் கூட் டுறவு உர விற்பனை நிலையங்களில் உரக் கட்டுப்பாடு பிரிவு அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த 13 உர விற்பனை நிலையங்களுக்கு தடை விதித்து உத்தர விட்டனர். மேலும், முறையாக பட்டியல்கள் வழங்காத நிறுவனங்கள் மற்றும் பதிவேடுக ளைப் பராமரிக்காத நிறுவனங்களுக்கு விளக் கம்கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், அதிகபட்ச விற்பனை விலையை காட்டிலும் கூடுதல் விலைக்கு விற்பனை செய் யக்கூடாது. உரங்களுடன் எவ்வித இணைப் பொருட்களையும் இணைத்து விவசாயிக ளுக்கு விநியோகம் செய்யக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் நூலகங்கள் திறப்பு
தருமபுரி, ஜூன் 11- தருமபுரியிலுள்ள அரசு மருத்துவமனை களில் அமைக்கப்பட்டுள்ள நூலகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் மாவட்ட அரசு மருத்துவ மனைகள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனைகள், பேருந்து நிலையங்கள் ஆகிய வற்றில் நூலகங்கள் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதனடிப்படையில், தமிழ்நாட்டில் பொதுமக் கள் கூடும் 70 இடங்களில் அமைக்கப்பட் டுள்ள நூலகங்களை காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத் தார். தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பென்னாகரம் அரசு தலைமை மருத்துவ மனை மற்றும் அரூர் வட்டார தலைமை மருத் துவமனை ஆகிய இடங்களில் நூலகங்கள் திறக்கப்பட்டன. தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட மருத்துவ நலப்பணி கள் இணை இயக்குநர் எம்.சாந்தி, மருத்து வக்கல்லூரி மருத்துவர் என்.சிவகுமார் ஆகி யோர் கலந்து கொண்டனர்.
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: 2 பேர் கைது
சேலம், ஜூன் 11- ஆத்தூரைச் சேர்ந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், 2 பேரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த 2 பள்ளி மாணவிகளை காணவில்லை எனக்கூறி, பெற்றோர்கள் ஆத்தூர் நகர காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில், ஆத்தூரைச் சேர்ந்த மணிகண்டன் (25), கௌதம் (22) ஆகிய இருவரும், சிறுமிகளை காதலிப்பதாகக்கூறி, திருச்செந்தூருக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டன் மற்றும் கௌதம் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து, சிறுமிகளை மீட்டனர்.
தனியாக வசிக்கும் முதியவர்கள் கொலை சம்பவங்களை தடுக்க தீவிர கண்காணிப்பு
சேலம், ஜூன் 11- தனியாக வசித்து வரும் முதியவர் களை குறிவைத்து நடக்கும் கொலை சம்பவங்களை தடுக்க, கண்காணிப்பு பலப்படுத்தப்படும், என சட்டம் - ஒழுங்கு கூடுதல் தலைமை இயக்குநர் டேவிட் சன் தேவாசீர்வாதம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சேலத்தில் செவ்வாயன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் கொலை, கொள்ளை உள் ளிட்ட குற்றச் சம்பவங்கள் குறைந்துள் ளன. ஊரக காவல் உள்கோட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். போதைப்பொருள் விற்பனை, கஞ்சா கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல் களுக்கு துணைபோகும் காவல் துறை யினர் மீது கடும் நடவடிக்கை எடுக் கப்படும். போதைப்பொருள் பயன்பாட் டைத் தடுக்க உளவுத் துறை மூலம் கண் காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப் படுத்தியுள்ளோம். குற்றச் சம்பவங்கள் அதிகம் நிகழும் பகுதிகளில் பதிவேடுக ளின் அடிப்படையில் விரைந்து தண் டனை பெற்றுத்தர காவல் துறையின ருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக காவல் துறையில் தேவை யான காவலர்கள் இல்லாததால் கூடு தல் பணி நெருக்கடிக்கு மத்தியிலும் சிறப்பாக பணிபுரிய வேண்டிய சூழல் உள்ளது. கொங்கு மண்டலத்தில் பண்ணை வீடுகளில் தனியாக வசிக்கும் முதியவர்களை குறிவைத்து நடைபெ றும் கொலை சம்பவங்களைத் தடுக்க கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள் ளது. மக்களிடையே விழிப்புணர்வு இருப் பதால்தான் போக்சோ வழக்குகளின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது, என் றார்.