tamilnadu

குடிநீர் திட்ட மோட்டார் பழுது: நகராட்சி நிர்வாகத்தின் மெத்தனப்போக்கால் குடிநீரின்றி பொதுமக்கள் கடும் அவதி

குடிநீர் திட்ட மோட்டார் பழுது: நகராட்சி நிர்வாகத்தின் மெத்தனப்போக்கால் குடிநீரின்றி பொதுமக்கள் கடும் அவதி

உதகை, ஜூன் 4- பார்சன்ஸ்வேலி குடிநீர் திட்ட மோட்டார் பழுதடைந்த நிலையில், அதனை சரிசெய்யாமல் நகராட்சி நிர்வாகம் மெத்தனமாக உள்ள தால், 2 வாரமாக குடிநீர் கிடைக்கா மல் சிரமப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகை நக ராட்சியில் மொத்தம் 36 வார்டுகளில்  ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு குடியிருப்புகள் மட்டுமின்றி 700க்கும் மேற்பட்ட தங்கும் விடுதி கள் உள்ளன. தினசரி 5 ஆயிரத் திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணி கள் வந்து செல்கின்றனர். உதகை  நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கிய  அணையாக பார்சன்ஸ்வேலி அணை உள்ளது. இந்த அணையி லிருந்து முதல், 2 ஆவது, 3 ஆவது  குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உதகை நகராட்சியை பொறுத்தவரை பார்சன்ஸ்வேலி அணையிலிருந்து 70 சதவீதம் தண் ்ணீரும், மற்ற சிறிய அணைகளில் இருந்து 30 சதவீதம் தண்ணீரும் விநியோகம் செய்யப்பட்டு வரு கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல்,  மே மாதங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளூர் மக்கள் அவதிப் படுகின்றனர். ஆனால், இந்த ஆண்டு பருவமழைகள் மற்றும் சமீ பத்தில் கோடை மழை நன்றாக பெய் ததால், அணை முழு கொள்ள ளவை எட்டியுள்ளது. இதனிடையே, கடந்த மே 24  முதல் 29 ஆம் தேதி வரை மழை  வெளுத்து வாங்கியதால், பல் வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. பார் சன்ஸ் வேலி அணைப்பகுதியில் மரங் கள் மின்கம்பங்கள் மீது விழுந்து,  மின் விநியோகம் நிறுத்தப்பட்ட தால், தண்ணீர் விநியோகம் பாதிக் கப்பட்டது. தற்போது அந்த பாதிப்பு  சரி செய்யப்பட்டு தண்ணீர் விநியோ கம் தொடங்கியுள்ளது. ஆனால்,  பார்சன்ஸ்வேலியில் முதல் குடிநீர்  திட்டத்திலுள்ள மோட்டார் பழுத டைந்து, இரண்டு வார காலமாகியும் சரி செய்யப்படாததால், உதகை ரோஸ் மவுண்ட் உள்ளிட்ட பகுதிக ளுக்கு குடிநீர் விநியோகம் செய்ய  முடியவில்லை. இதுகுறித்து அப்பகுதி பொது மக்கள் கூறுகையில், பார்சன்ஸ் வேலியில் மூன்று குடிநீர் திட்டங்க ளுக்கும் தனித்தனியாக மோட்டார் உள்ளது. இந்த மோட்டார்களில் பழுது ஏற்பட்டால் மாற்று ஏற்பா டாக மற்றொரு கூடுதல் மோட்டார்  உள்ளது. ஆனால், கூடுதல் மோட் டார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழுதாகி சரி செய்யப்படா மல் அப்படியே விடப்பட்டுவிட்டது. தற்போது பார்சன்ஸ்வேலி முதல்  திட்ட மோட்டார் பழுதாகி இரண்டு  வாரங்களாகியும் சரி செய்யப்பட வில்லை. நகராட்சி நிர்வாகத்தின் மெத்தனப்போக்கால் உதகையில் மொத்தம் ஏழு வார்டுகளில் வசிப் போர், குடிநீரின்றி தவிப்புக்குள் ளாகி வருவதாக, தெரிவித்தனர். இதுகுறித்து நகராட்சி நிர் வாகத்தினர் கூறுகையில், பார் சன்ஸ்வேலி முதல் குடிநீர் திட்ட  மோட்டார் 200 எச்பி திறன் கொண் டது. அவற்றை கோவையில் சரி  செய்ய முடியாததால், ஈரோட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இரண்டு  நாட்களில் மோட்டார் வந்துவிடும். இதேபோல் கொல்கத்தாவிலி ருந்து புதிய 200 எச்பி மோட்டார் ஒன்று புதிதாக வாங்கப்பட உள் ளது. மாற்று ஏற்பாடாக லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்து  வருகிறோம், என்றனர்.