tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

நாமக்கல், ஜூன் 28- காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையின் காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இந்நிலையில், மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளதால், 50 ஆயிரம் முதல் 75 ஆயிரம் கனஅடி வரை உபரிநீர் திறக்கப்படுள்ள நிலையில், காவிரி கரையோர பகுதி மக்களக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதன்படி, நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் காவிரி கரையோர பகுதிகளான ஜனதா நகர், பாவடி தெரு, நாட்டான் கவுண்டன் புதூர் உள் ளிட்ட பல்வேறு இடங்களில், சனியன்று மாலை வருவாய் துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர். தாழ் வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப் பட்டது.

பணத்தை மீட்டுத்தரக்கோரி பொதுமக்கள் முற்றுகை

சேலம், ஜூன் 28- நிதி நிறுவன மோசடி நபர்களிடமிருந்து, எங்களது பணத்தை மீட்டுத்தரக்கோரி, பாதிக்கப்பட்ட மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், சொர்ணபுரியில் தனி யார் நிதி நிறுவனத்தை திருவண்ணாமலை யைச் சேர்ந்த ராஜேஷ் நடத்தி வந்தார். இவர் மீதான பணம் மோசடி புகாரைத் தொடர்ந்து,  ராஜேஷ் உட்பட 9 பேரை பள்ளப்பட்டி காவல் துறையினர் கைது செய்தனர். தற்போது நிபந் தனை ஜாமீனில் வந்துள்ள அவர், காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு வருகிறார். இந்நிலையில், அவரது நிநி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தவர்கள், ராஜேஷை தொடர்புகொண்டு கேட்டபோது, டீம் லீடரி டம் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. அவரிடம் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். இந்நிலையில், அந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்ட 100க்கும் மேற் பட்டோர், அந்நிறுவனத்தின் டீம் லீடரான வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்த கிருத்திகா வீட்டிற்குச் சென்று பணத்தை தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த கருப்பூர் காவல் துறையினர் கிருத்திகா மற் றும் சிலரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதையறிந்த பொதுமக்கள், கருப்பூர் காவல் நிலை யத்தை முற்றுகையிட்டு பணத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும், எனக்கூறி முழக்கங் களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மருத்துவமனை அருகே கழிவுகளை  கொட்டுவதால் சுகாதார சீர்கேடு

நாமக்கல், ஜூன் 28- மல்லசமுத்திரம் அருகே உள்ள அரசு மருத்துவமனை பகுதியில் குப்பை கழிவுகளை கொட்டுவதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள  மல்லசமுத்திரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ராமாபுரத்தில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. தினந்தோறும் பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான கர்ப்பிணிகள், குழந்தைகள் என பலரும் சிகிச்சைக்காக வந்து செல்கின்ற னர். இந்த மருத்துவமனையின் நுழைவு வாயில் அருகே, குப்பைக்கழிவுகள் கொட்டப்பட்டு மலைபோல் தேங்கி கிடக்கி றது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, குப்பைக்கழிவு களை உடனடியாக அகற்றுவதுடன், அப்பகுதியில் கழிவு களை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்