tamilnadu

துணை குடியரசுத்தலைவர், ஆளுநர் வருகை

துணை குடியரசுத்தலைவர், ஆளுநர் வருகை

உதகையில் ஆலோசனைக் கூட்டம்

உதகை, ஏப். 23 – நீலகிரி மாவட்டத்தில் ஆளுநர்  கூட்டியுள்ள துணைவேந்தர்கள் மாநாட்டை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத் துத் துறை அரசு அதிகாரிகளுட னான ஆலோசனைக் கூட்டம் புத னன்று நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், உதகை ராஜ் பவனில் வரும் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்த ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்பாடு செய்துள்ளார். இந்த மாநாட்டில், இந்திய துணை குடியரசுத்தலைவர் ஜெகதீப் தன் கர் சிறப்பு விருந்தினராகக் கலந்து  கொள்கிறார். இதனை முன்னிட்டு, துணை குடியரசுத்தலைவர் ஜெகதீப் தன் கர் அவர்கள் வரும் 25 ஆம் தேதி  காலை 10.35 மணிக்கு கோயம் புத்தூர் வருகிறார். அங்கிருந்து, விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டம் உதகை யில் உள்ள தீட்டுக்கல் பகுதியில் தரையிறங்குகிறார். அங்கு, ஆளு நர் ஆர்.என்.ரவி மற்றும் உயர் அரசு  அதிகாரிகள் அவரை வரவேற்கின் றனர். அதனைத் தொடர்ந்து, உத கையில் நடைபெறும் துணை வேந்தர்கள் மாநாட்டில் துணை  குடியரசுத்தலைவர் உரையாற்று கிறார். வரும் 26 ஆம் தேதி, துணை  குடியரசுத்தலைவர் உதகை தாவர வியல் பூங்கா, தொட்டபெட்டா சிக ரம் மற்றும் காட்சி முனை ஆகிய  இடங்களை பார்வையிடுகிறார். 27 ஆம் தேதி, அவர் உதகையிலி ருந்து மீண்டும் ஹெலிகாப்டர்  மூலம் கோயம்புத்தூர் பீளமேட்டில்  உள்ள விமான நிலையத்திற்குச்  செல்கிறார். பின்னர், கோயம்புத் தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல் கலைக்கழகத்தில் நடைபெறும் மாணவ-மாணவிகளுடனான கலந் துரையாடல் நிகழ்ச்சியில் பங் கேற்று உரையாற்றுகிறார். இந்நிலையில், துணை குடிய ரசுத்தலைவரின் நீலகிரி பய ணத்தை முன்னிட்டு, ஹெலிகாப்டர்  ஒத்திகை மற்றும் வாகன பாது காப்பு ஒத்திகை நேற்று நடைபெற் றது. இதன் ஒரு பகுதியாக, உதகை  தீட்டுக்கல் மைதானம் மற்றும்  மாற்று ஏற்பாடாக மசினகுடியில்  ஹெலிகாப்டர் பாதுகாப்பாக தரை யிறங்குவது குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், துணை குடியரசுத்தலைவரின் பய ணத்திற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் மேற்கொண்டு வரு கின்றனர்.

ஆளுநரை எதிர்த்து போராட்டம்!

உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் துணைவேந்தர்கள் மாநாட்டை கூட்டும் ஆளுநரின் அடாவடியை கண்டித்து, மாநாடு நடைபெ றும் நாளில் ஊட்டியில் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளதாக தந்தை  பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தால் Tamil Nadu Universities Laws (Amendment) Act, 2022 குறித்து வழங்கப்பட்ட தீர்ப்பையும், தமிழ்நாடு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தையும் மதிக்காமல், மாநில ஆளுநர் ஆர். என். ரவி செயல் படுகிறார். இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் மாநாட்டை வரும் மே 25, 2025 அன்று நீலகிரி மாவட் டத்தில் உள்ள தமிழக மாளிகையில் நடத்த உள்ளார். இந்த நடவடிக்கை யால், ஆளுநர் நீதிமன்றத் தீர்ப்பையும், மாநில சட்டமன்றத்தின் சட்ட பூர்வ அதிகாரத்தையும் புறக்கணித்து, மக்கள் விரோதமாக செயல் படுகிறார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனை கண்டித்தும், ஆளுநரை உடனடியாக திரும்பப் பெற  ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் வலியு றுத்தி, மே 25 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஊட்டி தமிழக மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என தந்தை  பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டிணன் அறிவித்துள்ளார்.