வாச்சாத்தி வன்கொடுமை: வரலாற்று தீர்ப்பை பெற்ற செங்கொடி!
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வாச்சாத்தி கிராமத்தில் 1992-ம் ஆண்டு ஜூன் 20, 21, 22 ஆகிய தேதிகளில் வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்துறையைச் சேர்ந்த 269 பேர் நுழைந்து நடத்திய காட்டுமிராண்டித் தனமான தாக்குதல் மற்றும் பாலியல் வன் கொடுமை சம்பவங்கள் தமிழகத்தையே உலுக்கியது. நீண்ட நெடிய போராட்டம்: வாச்சாத்தி கிராமத்தில் நடைபெற்ற இந்த அநீதிக்கும், பாதிப்புகளுக்கும், வன்கொடுமை களுக்கும் நீதிகேட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மும் உறுதியான தொடர் போராட்டத்தினை நடத்தின. இதன்பின் சிபிஐ (மத்திய புலனாய்வு துறை) விசாரணைக்கு உத்தரவிட்டது. 31 ஆண்டுகளுக்கு பின் சென்னை உயர் நீதிமன்றம், தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்ற தீர்ப்பை உறுதிசெய்து, மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்தது. பாலியல் வன்கொடு மைக்குள்ளாக்கப்பட்ட 18 பெண்களுக்கு தலா ரூ.10 லட்சம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். பொருளாதார ரீதியாக முன்னேற தொழில் மற்றும் இரண்டு ஏக்கர் நிலம் வழங்க வேண்டும். கிராமம் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் காண, கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதி கள் செய்து கொடுக்க வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது. நிவாரணம் மற்றும் அரசு வேலை: பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப் பட்ட 18 பெண்களுக்கும் தலா ரூ.10 லட்சத்திற் கான காசோலை வழங்கப்பட்டது. பாதிக்கப் பட்ட வாரிசுதாரர்களில் 16 நபர்களுக்கு அரசு வேலைக்கான பணி ஆணை வழங்கப்பட்டது. நீதிமன்ற தீர்ப்பின் இதர அம்சங்களான வீடு, விவசாய நிலம், இலவச வீட்டுமனைபட்டா, சுய தொழில், வாச்சாத்தி கிராமத்தின் பொருளா தார மேம்பாடு உள்ளிட்ட வசதிகளை தமிழ் நாடு அரசு செய்து கொடுக்க வேண்டும். வாச்சாத்தி மக்களின் நன்றி: நீதிகிடைக்க போராடிய மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, மலைவாழ் மக்கள் சங்கத்திற் கும் வாச்சாத்தி மக்கள் நன்றியை தெரிவித்த னர். வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை கொண் டாட வாச்சாத்திக்கு சென்ற சிபிஎம் தலைவர்க ளுக்கு பழங்குடியின மக்கள் உணர்ச்சிமிகு வர வேற்பளித்தனர். ஆதிக்க சக்தி, அதிகார வர்க்கத்தினால் எங்கு அத்துமீறல் நடக்கிறேதோ, அதனை எதிர்த்து போராட வேண்டும் என்ற வாச்சாத்தி மக்களின் உறுதியான போராட்டத்தின் மூல மே வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு கிடைத்துள்ள தென மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் தெரி வித்தனர். செந்தொண்டர் அணிவகுப்பு: மதுரையில் ஏப்.2 – 6 தேதிகளில் நடை பெறும் கட்சியின் அகில இந்திய மாநாட்டில், செந்தொண்டர் அணிவகுப்பை வாச்சாத்தி போராளிகள் துவங்கி வைக்கவுள்ளது குறிப் பிடத்தக்கது.