tamilnadu

img

குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தல்

குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை  பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தல்

தருமபுரி, ஜூன் 29- நவலை கிராமத்தில் புதியதாக அமைக்கப்பட்ட சுத்தி கரிப்பு நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்  என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத் திற்குட்பட்ட நவலை கிராமத்தில், 2 ஆயிரத்திற்கும் மேற் பட்ட பட்டியலின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு  ஊராட்சியின் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. இந்த தண்ணீரை இதர தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர். குடிப்பதற்க்கு ஒகேனக்கல் குடிநீர் வாரத்திற்கு ஒருமுறை வரு வதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஒகேனக்கல் குடிநீர்  பற்றாக்குறையால் உப்பு கலந்த தண்ணீரை குடித்து வந்தனர்.  இதனால் குடிநீருக்காக விவசாய கிணறுகளுக்கு தேடி  செல்லும் நிலைமை இருந்து வந்தது. குடிநீர் பிரச் சனையை தீர்க்க அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்த னர். இதையடுத்து ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில், சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால், பல மாதங்களாகியும் திறக்கப்படவில்லை. தற் போது சுத்திகரிப்பு நிலையம் காட்சி பொருளாகவே உள் ளது. எனவே, நவலை கிராமத்தின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க புதியதாக அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.