tamilnadu

100 நாள் வேலை தொழிலாளர்களை பட்டினி போடும் ஒன்றிய அரசு

100 நாள் வேலை தொழிலாளர்களை பட்டினி போடும் ஒன்றிய அரசு

கே.பாலபாரதி குற்றச்சாட்டு

நாமக்கல், ஏப்.16- பெரும் பணக்காரர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யும் வேலையை மட்டும் செய்து வரும்  ஒன்றிய மோடி அரசு, நூறு நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களை பட்டினி போடுவதாக, சிபிஎம்  மத்தியக்குழு உறுப்பினர் கே.பால பாரதி குற்றஞ்சாட்டியுள்ளார். தேசிய கிராமப்புற ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு கடந்த  மூன்று மாத சம்பளம் நிலுவையில்  உள்ளது. இதனால் இப்பணியில் ஈடுபடும் தொழிலாளர்களின் குடும்ப சூழ்நிலை மிகவும் நெருக் கடிக்கு ஆளாகியுள்ளது. எனவே, 2025 ஆம் ஆண்டிற்கு நூறு நாட் கள் முழுவதுமாக வேலை வழங்க  வேண்டும். கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்திற்கு ஒன்றிய அரசு  வழங்க வேண்டிய தொகையை தமி ழகத்திற்கு உடனடியாக வழங்க  வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியினர் புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளை யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்  முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் சு.சுரேஷ் தலைமை வகித்தார். சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும், கட்சியின்  மத்தியக்குழு உறுப்பினருமான கே.பாலபாரதி கண்டனவுரையாற் றினார். இதில், மாவட்டச் செயலா ளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற் குழு உறுப்பினர் தமிழ்மணி, கிழக்கு  ஒன்றியச் செயலாளர் தேவராஜ், மேற்கு ஒன்றியச் செயலாளர் ரமேஷ், மாவட்டக்குழு உறுப்பினர் கள் பழனியம்மாள், கவிதா உட்பட  500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மூத்த தோழர் பெரிய சாமி நன்றி கூறினார். முடிவில், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. இதனிடையே, சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலபாரதி செய்தியாளர்களிடம் பேசுகையில்,  தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் தொழிலா ளர்களுக்கு சம்பளம் வழங்காமல்,  ஒன்றிய அரசு அரசியல் உள்நோக் கத்தோடு துரோக நடவடிக்கையில் செயல்படுகிறது. இத்திட்டத்தில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்குவதை படிப்படியாக குறைத்துக் கொண்டே வருகின்றனர். பெரும்  பணக்காரர்களுக்கு கடன் தள்ளு படி செய்யும் வேலையை மட்டும் செய்து வரும் ஒன்றிய அரசு, தமிழ் நாட்டை ஒருதலைப்பட்சமாக நடத் துகிறது. தொழிலாளர்களை பட் டினி போடும் நிலையை ஏற்படுத்தி யுள்ளது. ஒன்றிய அமைச்சர்கள், பிரதமர் மற்றும் அரசு ஊழியர் களுக்கு சம்பள பாக்கியில்லை. ஆனால், கஷ்டப்பட்டு உழைக்கும் தொழிலாளர்களுக்கு தர வேண் டிய நிதியை வழங்குவதில் மட்டும்  பாரபட்சம் தொடர்கிறது. இத்திட் டத்தில் நிதி வழங்கி, தமிழக விரோத  நடவடிக்கையை ஒன்றிய கைவிட  வேண்டும். இதுபோன்ற நடவ டிக்கையில் தொடர்ந்து ஈடுபட் டால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  தமிழகம் முழுவதும் போராடும். மேலும், தொழிலாளர்களின் பிரச்சனைகளில் தலையிடாமல் விட்டுவிட்டு, தமிழகத்திற்கு வரும்  ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுக தலைவர்களின் வீட்டுக்கு ரைடு நடத்தி, அதிமு கவை, தங்களது கூட்டணியில் இணைப்பதற்கான நடவடிக்கை தான் மேற்கொள்கிறார். கூட்டணி பற்றி தான் பேசுகிறார்கள் தவிர, தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளப் பாக்கியை வழங்குவது குறித்து எவ்வித நடவ டிக்கையும் இல்லை. சுயநலமாக செயல்படும் ஒன்றிய அரசு, தமிழ கத்திற்கு நிதி வழங்க வேண்டும் என  தமிழ்நாடு முதல்வர் கடிதமும் எழுதி யுள்ளார். எனவே, ஒன்றிய அரசு வழங்க வேண்டிய சம்பளப் பாக் கியை உடனடியாக வழங்கி, தொழி லாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும், என்றார்.