நீட் தேர்வு எழுதும் மாற்றுப் பாலினத்தவர்'
கோவை, மே 3- கோவையில் இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதும் 22 வயது மாற்றுப் பாலினத்த வர், கல்வி மட்டுமே எங்களது எதிர்காலத்தை காப்பாற்றும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம், சாய்பாபா கால ணியை சேர்ந்தவர் இந்திரஜா (22), மாற்றுப் பாலினத்தவர். இவர் கோவை ராம்நகர் பகுதி யிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 12 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். தொடர்ந்து கோவை அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்.சி வேதியியல் படித்து வந்தார். ஆனால் எம்.பி. பி.எஸ் படித்து மருத்துவர் ஆக வேண்டும் என்பதற்காக கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, நீட் தேர்வுக்கு தயாராகி வரு கிறார். கடந்த ஆண்டு எழுதிய நீட் தேர்வில் தேர்ச்சியடையாத இந்திரஜா மீண்டும் இந்த ஆண்டு தேர்வு எழுதவுள்ளார். மேலும் இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து நீட் எழுதும் ஒரே திருநங்கை எனக் கூறிய அவர் கல்வி மட்டுமே எங்களை காப்பாற் றும் என தெரிவித்தார். இது குறித்து பேசிய இந்திரஜா, யாரு டைய துணையும் இன்றி தனியாக தங்கி நீட் தேர்வுக்கு தயாராகி வருகிறேன். நான் மருத்துவரானால் எங்களது சமூகத்தின ருக்கு உதவுவேன். மேலும், திருநங்கைகள் அனைத்து துறைகளில் வர வேண்டும், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு வர படிக்க வேண்டும் என சக திருநங்கைகளுக்கு கூறி வருகிறேன், கல்வி மட்டுமே எங்களது எதிர்காலத்தை மாற் றும் என நம்புகிறேன், என்றார்.