தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
உதகை, ஜூலை 6- வார விடுமுறை நாளையொட்டி, உதகை அரசு தாவரவியல் பூங்காவில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந் தனர். ‘மலைகளின் அரசி’ என்று அழைக் கப்படும் நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த சுற்றுலாத் தலமாகும். இம்மாவட்டத் திற்கு அண்டை மாநிலங்களான கேர ளம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ கத்தின் பிற பகுதிகளில் இருந்து நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந் நிலையில் வார விடுமுறை நாளான ஞாயிறன்று உதகை அரசு தாவ ரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிக ளின் கூட்டம் அதிக ரித்து காணப்பட்டது. பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் பூத் துக் குலுங்கும் வண்ண மலர்களை கண்டு ரசித்தனர். மேலும், பூங்காவில் உள்ள புல்வெளி மைதானத்தில் சிறிய வர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாடி உற்சாகமடைந்தனர்.