ஒன்றிய அரசின் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக, 2021 ஆம் ஆண்டு நசியனூரில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் முத்து பழனிசாமி, என்.பாலசுப்பிரமணி, பா.லலிதா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கிலிருந்து வியாழனன்று அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
