அலுவலரும் இல்லை, ஆய்வாளரும் இல்லை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் அவலம்
கோபி, ஜூன் 14- கோபி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வாகனப் பதிவு எண், வாகனப் புதுப்பித்தல் சான்று உள் ளிட்டவைகள் பெற வாகன ஓட்டி கள் நீண்ட நேரம் காத்திருக்கும் அவல நிலை எற்பட்டுள்ளதால், நிரந்த அலுவலர், ஆய்வாளரை நியமிக்க வேண்டி வாகன ஓட்டி கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபியில் வட்டாரப் போக்குவரத்து அலுவல கம் உள்ளது. இங்கு நாள்தோறும் 200க்கும் மேற்பட்டோர் வாகனப் பதிவு எண், ஓட்டுநர் உரிமம், வாகனச் சான்று புதுப்பித்தல் உள் ளிட்டவைகளுக்காக வருகின்றனர். நாள்தோறும் நூற்றுக்கணக்கா னோர் வரும் கோபி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் போக்குவரத்து அலுவலர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் நிய மிக்கப்படவில்லை. திருச்செங் கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மோகன பிரியா மற்றும் சத்தியமங்கலம் மோட்டார் வாகன ஆய்வாளர் ரவிக்குமார் பொறுப்பு அலுவலர்களாக இருந்து வரு கின்றனர். இந்நிலையில், கோபி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு வாரத்திற்கு இரண்டு நாட்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவல ரும் ஒருநாள் விட்டு ஒருநாள் என மூன்று நாட்களுக்கு மோட்டார் வாகன ஆய்வாளர் பொறுப்பு அலு வலர்களாக பணியாற்றி வருகின்ற னர். இதனால் நாள்தோறும் குறைந்த அளவில் வரும் வாகனங் கள் ஒருநாள் விட்டு ஒருநாள் மட் டுமே மோட்டார் வாகன ஆய்வாளர் வந்து செல்கின்றனர். இதனால், புதி தாக வாங்கப்பட்ட வாகனங்கள் பதிவு எண் பெறவும் வாகன புதுப் பிப்பு, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட வைகளுக்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நாள் முழுவதும் காத்தி ருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள் ளது. காலை 10 மணிக்கு தொடங் கும் இப்பணி மதியம் 3 மணி ஆனா லும் முடிவதில்லை. இரண்டு நாட் கள் வரை கால தாமதம் ஏற்படுகி றது. எனவே, வட்டாரப் போக்குவ ரத்து அலுவலகத்தில் பொதுமக் கள் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்க கோபி வட்டா ரப் போக்குவரத்து அலுவலகத் திற்கு நிரந்தரமாக வட்டார போக்கு வரத்து அலுவலரையும் மோட்டார் வாகன ஆய்வாளரையும் நிய மிக்க வேண்டும் என ஆர்டிஓ அலு வலகத்திற்கு வருபவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.