tamilnadu

ஏற்காட்டில் 48 ஆவது கோடை விழா துவங்கியது

ஏற்காட்டில் 48 ஆவது கோடை விழா துவங்கியது

சேலம், மே 23- ‘ஏழைகளின் ஊட்டி’ என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் 48  ஆவது கோடை விழா வெள்ளி யன்று துவங்கியது. சேலம் மாவட்டம், சேர்வராயன் மலைத்தொடரில் அமைந்துள்ள ஏற் காட்டில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா மற்றும் மலர்  கண்காட்சி நடைபெறுவது வழக் கம். அதன்படி, இந்தாண்டிற்கான 48  ஆவது கோடை விழா மலர் கண் காட்சியை தமிழக அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ரா. ராஜேந்திரன், ராஜ கண்ணப்பன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கோடை விழாவில் தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அண்ணா பூங்காவில் 1.50 லட்சம் மலர்க ளைக் கொண்டு மலர் கண்காட்சி மற்றும் பழக்கண்காட்சி மற்றும் காய்கறி கண்காட்சிகள் அமைக் கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணி களை மகிழ்விக்கும் வகையில்,  படகு போட்டி செல்லப்பிராணி கள் போட்டி, குழந்தைகள் போட்டி, கலை நிகழ்ச்சிகள் நடத் தப்படவுள்ளது. இதனிடையே, இவ் விழாவை தொடர்ந்து ஏற்காடு  இருவழிப்பாதையாக மாற்றப்பட் டுள்ளது. ஏற்காடு கோரிமேடு அடி வாரம் வழியாக சென்று விட்டு, கொட்டச்சேடு குப்பனூர் வழியாக செல்ல காவல் துறையினர் அறிவு றுத்தியுள்ளனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், ஏற்காட்டில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

குன்னூரில் 65 ஆவது பழக்கண்காட்சி துவக்கம்'

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல்,  மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக் கம். இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் தோட்டக்கலைத்துறை, சுற்றுலாத் துறை, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கோடை  விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன்தொ டர்ச்சியாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் துவக்கப் பட்டு 151 ஆவது ஆண்டு விழா மற்றும் 65 ஆவது பழக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமையில், தமிழக அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.  பழக் கண்காட்சியை காண வரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் இந்த ஆண்டு எலு மிச்சை வடிவமைப்பான பிரம்மாண்டமான லெமன் வடிவமைப்பு சுற்றுலாப் பயணிகளை வெகு வாக கவர்ந்து வருகிறது. அதேபோல் ஆரஞ்சு, செரி, பிளம்ஸ்  உள்ளிட்ட பழங்களைக் கொண்டு  பழ ரச கோப்பை, கடற்கரை குடை, பழ ஐஸ்கிரீம், பேரிச்சம்பழங்களை கொண்டு தென்னை மரத்தில் பீச் ஊஞ்சல், சர்ப் போட், விசில், தொப்பி, கண் ணாடி, பழ கேக், இளநீர், கார், உள்ளிட்ட 3.8 டன் எடையுள்ள பல்வேறு பழங்களை கொண்டு  20-க்கும் மேற்பட்ட பழங்களான வடிவமைப்புகள்  சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெள்ளி யன்று துவங்கிய பழக்கண்காட்சி எதிர்வரும் 26 ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற உள்ளது.