tamilnadu

போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பெரியார் பல்கலை., ஊழியர்கள் 4 பேரின் பணிநீக்க உத்தரவு ரத்து

போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பெரியார் பல்கலை., ஊழியர்கள் 4 பேரின் பணிநீக்க உத்தரவு ரத்து

சேலம், ஜூன் 14- முறைகேடுகளை தடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சேலம் பெரியார் பல்கலைக்கழக தற்காலிக ஊழியர்கள் 4 பேர் மீதான பணிநீக்க உத்தரவை தொழி லாளர் தீப்பாயம் ரத்து செய்ததையடுத்து, மீண்டும் பணி யில் சேர்ந்தனர். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தொகுப் பூதியம் மற்றும் தினக்கூலி அடிப்படையில் 400க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் தங்களை, பணி நிரந்தரம் செய்யக்கோரி பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கம் சார்பில், சென்னை தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதனி டையே, பணி நிரந்தரம் கோரியும், பல்கலைக்கழகத் தில் நடைபெற்ற ஊழல், முறைகேடுகளை தடுக்க வலியுறுத்தியும் தொழிலாளர் சங்கத்தினர் போராட் டத்தில் ஈடுபட்டனர். இதனால் சங்கத்தின் தலைலர் கனி வண்ணன், பொதுச்செயலாளர் சக்திவேல், அமைப்புச் செயலாளர் கிருஷ்ணவேணி, துணைத்தலைவர் செந் தில்குமார் ஆகிய 4 பேரை கடந்தாண்டு ஜனவரி மாதம் நிரந்தரமாக பணிநீக்கம் செய்வதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தது. ஆனால், சென்னை தொழிலாளர் தீர்ப்பாயத்தில் பணிநிரந்தர வழக்கு நிலுவையில் உள்ளதால், ஆணை யத்தின் முன் அனுமதி பெறாமல் வழக்கில் உள்ளவர் களை பணியிடை நீக்கமோ, பணி நீக்கமோ செய்ய இய லாது. இதனை எதிர்த்து தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் சக்திவேல், தொழிலாளர் நலச் சட்டம் 31  இன் கீழ் பல்கலைக்கழகத் தலைமை நிர்வாகிகளான ஜெகநாதன் மற்றும் பாலகுருநாதன் மீது 6 மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கக்கூடிய குற்றவியல் வழக்குத் தொடர வேண்டும் என தொழிலாளர் நல ஆணையரிடம் முறையிட்டார். இதனை விசாரித்த சேலம் தொழிலாளர் நல உதவி ஆணையர் (சமரசம்), இருதரப்பு வாதங்களையும் கேட்டு அதன் அறிக் கையை சென்னை தொழிலாளர் நல ஆணையருக்கு அனுப்பி வைத்தார். இந்நிலையில், ஆவணங்களை சரிபார்த்த தொழி லாளர் நலத்துறை அதிகாரிகள், பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தராக அப்போது இருந்த ஜெகநாதன் மற்றும் அப்போதைய பொறுப்பு பதிவாளர் பாலகுருநா தன் மீது குற்றவியல் வழக்குத் தொடர அனுமதி வழங் கினர். இந்நிலையில், துணை வேந்தராக இருந்த ஜெக நாதனின் பதவிகாலம் மே 19 ஆம் தேதியுடன் நிறைவ டைந்தது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் பணி நீக்கத்தில் உள்ள நான்கு தொழிலாளர் களையும் மீண்டும் பணியில் சோ்த்து கொள்வது தொடர் பாக விவாதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சம்பந் தப்பட்ட நான்கு பேரின் பணி நீக்கம் ரத்து செய்யப்பட் டது. தொடர்ந்து அவர்கள் வெள்ளியன்று மீண்டும் பணியில் சேர்ந்தனர்.