tamilnadu

கரூர் துயரம் குறித்து சிபிஐ விசாரணை கோரி வழக்கு தமிழக அரசு விரிவான பதிலளிக்க உச்சநீதிமன்றம் அனுமதி

கரூர் துயரம் குறித்து சிபிஐ விசாரணை கோரி வழக்கு தமிழக அரசு விரிவான பதிலளிக்க  உச்சநீதிமன்றம் அனுமதி

புதுதில்லி, அக். 10 - கரூரில் தவெக தலைவர் விஜய்-யின் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர்  பலியானது குறித்து சிபிஐ விசாரணை கோரும் மனுக்கள் மீது தமிழக அரசு  விரிவான பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர் துயர சம்பவத்தில், சிபிஐ விசாரணை கோரி, பன்னீர்செல்வம் (உயிரிழந்த 13 வயது சிறுவனின் தந்தை), ஜி.எஸ். மணி (பாஜக), ஆதவ்  அர்ஜூனா (த.வெ.க.) ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். இதே போல வேறு 2 வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகள் நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் என்.வி.  அஞ்சாரியா அமர்வு முன்பு வெள்ளிக் கிழமையன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, நீதிபதி மகேஸ்வரி: ‘பத்தி 3-இல், விசாரணை கோரி அரசு  வழக்கறிஞர் ஒருவர் ரிட் மனு தாக்கல் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள் ளது. இந்த மனு, பிரிவு 226-இன்  கீழ் சென்னையில் தாக்கல் செய்யப் பட்டுள்ளது. இதுபோன்ற நிவாரணம் குற்றவியல் அதிகார வரம்பிற்குள் வருமா? இது எப்படி ஒரு குற்றவியல் ரிட் மனுவாகப் பதிவு செய்ய முடியும்? மேலும், சம்பவம் கரூரில் நடந்துள்ள நிலையில், இந்த மனு வேறு இடத்தில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது’ என்றார். அப்போது தவெக தரப்பில் ஆஜ ரான வழக்கறிஞர்கள், சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை எதிர்க்கிறோம்.  மாநில அரசின் விசாரணை குழு மீது நம்பிக்கையில்லை. காவல்துறை யின் வழிகாட்டலின்படி தான் கரூரில் இருந்து விஜய் வெளியேறி னார். விஜய் தப்பியோடவில்லை. எனவே, எந்தவொரு அமைப்பையும் சாராத அமைப்பே விசாரணை நடத்த வேண்டும். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க வேண்டும்’ என்று வாதிட்டனர். அதற்கு நீதிபதிகள், ‘சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் விஜய், தவெக வினர் எதிர்மனு தாரர்களாக உள்ள னரா? சென்னை உயர் நீதிமன்றம், இவ்வழக்கை விசாரித்தது ஏன்?’ என்று  கேட்டனர். ‘நிலையான வழிகாட்டு நெறி முறைகளுக்காக சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப் பட்டது. அந்த மனு ஏற்கனவே தனி நீதிபதி அமர்வு முன்பு நிலுவையில் உள்ளது’ என்று தமிழக அரசுத் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.  தொடர்ந்து, ‘ஒரே நாளில் வெவ் வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டிருப்பது எப்படி? இம்மனுக்களில் இரண்டு கேள்விகள் எழுகின்றன. ஒன்று, ரிட் மனுவின் தன்மை மற்றொ ன்று கரூர் சம்பவம். ஒரு தரப்பு மனு நிலையான வழிகாட்டு நெறிமுறை களுக்காக தாக்கல் செய்யப்பட்டது. மற் றொன்று மதுரையில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வால் விசாரிக்கப்பட்டுள் ளது. இது ஒரு முரண்பாடாக உள் ளது’ என்று நீதிபதிகள் கூறினர்.  பிற்பகலில், தமிழ்நாடு அரசுத் தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது. அப்போது, “உயிரிழந்த சிறுவனுடைய தந்தையின் வலி எங்களுக்குப் புரிகிறது. அதே வேளையில் இந்த விவகாரத்தை பொறுத்தவரை, தமிழ்நாடு அரசு சிறப்பு விசாரணைக் குழு அதிகாரியை நியமிக்கவில்லை. மாறாக உயர் நீதிமன்றம்தான் நிய மித்தது. அஸ்ரா கார்க் என்ற மூத்த அதி காரிதான் சிறப்பு விசாரணைக் குழு வின் அதிகாரியாக செயல்பட்டு வரு கிறார். இந்த அதிகாரி சி.பி.ஐ போன்ற  மத்திய விசாரணை அமைப்புகளில் பணி யாற்றியவர். சிறந்த அதிகாரியாக மதிக்கப்படுபவர். எனவே இவருடைய விசாரணையே தொடரலாம். இவ்வாறு பல வழக்குகளை தொடர்ச்சியாக சிபிஐ-க்கு மாற்றிக் கொண்டிருந்தால் சிபிஐ முன்பு அதிக அளவிலான வழக்குகள் குவிந்து கிடக்கும்” என்று தமிழக அரசு வாதிட்டது. இவற்றை கேட்ட நீதிபதிகள், கரூர்  நெரிசல் தொடர்பான வழக்கில் தீர்ப்பை  ஒத்திவைத்ததுடன், இவ்விவகாரத்தில் தமிழ்நாடு அரசு விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அனுமதி வழங்கினர்.