காவிரி ஆற்றுப்பாலத்தின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு
நாமக்கல், செப்.18- பள்ளிபாளையம் பழைய காவிரி ஆற்றுப்பாலத்தின் உறுதித்தன்மை குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வியாழனன்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர். ஈரோடு, நாமக்கல் ஆகிய இரு மாவட்டங்களை இணைக்கும் வகை யில், பள்ளிபாளையம் காவிரி ஆற் றின் நடுவே காமராஜர் முதல்வராக இருந்தபோது 1960 ஆம் ஆண்டு 32 பில்லருடன், பாலம் கட்டப்பட் டது. இந்தப் பாலத்தின் வழியாக தினந்தோறும் பல்லாயிரக்கணக் கான வாகனங்கள் சென்று வருகி றது. மேலும் நாமக்கல் மாவட்டத் தின் எல்லை பகுதியாகவும் பள்ளி பாளையம் காவிரி ஆறு உள்ளது. காவிரி ஆற்றில் பலமுறை வெள் ளப்பெருக்கு ஏற்பட்ட போதிலும் அனைத்து இடர்பாடுகளையும் தாண்டி இன்றளவும் பாலம் மக் கள் பயன்பாட்டில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிக வெள்ளப்பெருக்கு காரணமாக பழைய காவிரி ஆற்றுப் பாலத் தின் மேலே அதிகளவு வெள்ள நீர் சூழ்ந்து கொண்டு சென்றதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அருகிலேயே புதி தாக பாலம் கட்டப்பட்டு ஈரோடு செல்வதற்கு புதிய பாலமும் ஈரோட் டில் இருந்து பள்ளிபாளையம் வரு வதற்கு பழைய பாலமும் செயல் பட்டு வருகிறது. நாமக்கல் ஈரோட்டை இணைக் கும் மிக முக்கியமான பாலமாக இது உள்ள நிலையில் பாலம் கட்டப் பட்டு கிட்டத்தட்ட 64 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. பாலத்தின் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே சிறிய அளவிலான விரிசல்களும், பாலப் பகுதியில் பல்வேறு இடங்க ளில் சேதம் அடைந்தும் காணப்படு கிறது. மேலும் இரவு நேரங்களில் முறையாக மின்விளக்குகள் எரியா மலும், கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்த நிலையிலும் காணப் படுகிறது. எனவே காவிரி ஆற்று பழைய பாலத்தை முழுமையாக சீர மைத்து தர வேண்டும் என பல் வேறு தரப்பினர் மத்தியில் கோரிக் கைகள் எழுந்து வரும் நிலையில், பாலத்தின் உறுதித் தன்மை குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பத்துக்கும் மேற்பட்டோர் புதனன்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பாலத்தின் மேற்பரப் பில் உள்ள கான்கிரீட் தளம், பாலத் தின் இருபுறத்திலும் உள்ள பாது காப்பு சுவர், பாலத்தின் உயரம், அகலம், நீளம், விரிசல் பாலத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் பரிசல் மூலமாக காவிரி ஆற்றில் சென்று பாலத்தின் தூண் பகுதியின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வு வியாழனன்றும் தொடர்ந்தது.