tamilnadu

img

தேர்வு மையத்திற்கு மாறி வந்த மாணவிகள் திருப்பி அனுப்பிவைப்பு

தேர்வு மையத்திற்கு மாறி வந்த மாணவிகள் திருப்பி அனுப்பிவைப்பு

சேலம், மே 4- நீட் தேர்வு மையத்திற்கு மாறி வந்த  மாணவிகளை போலீசார் திருப்பி அனுப்பி வைத்தனர். சேலம் மாவட்டத்தில் 22 மையங்க ளில் 9731 மாணவ. மாணவிகள் தேர்வு  எழுத தேர்வு மையங்களுக்கு வந்தனர்.  சேலம் அரசு இருபாலர் கலைக்கல்லூரி யில் தேர்வு மையம் அமைக்கப்பட்டது. இந்த மையத்திற்கு, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரசி என் கிற மாணவி, மாறி வந்துள்ளார். இதைத் தொடர்ந்து அந்த மாணவியின் சான்றி தழ்கள் ஆய்வு செய்யப்பட்டு, கிருஷ்ண கிரி தேர்வு மையத்திற்கு அனுப்பி வைக் கப்பட்டார். இதேபோல், கொண்டலாம் பட்டி பகுதியைச் சேர்ந்த மாணவி, எடப் பாடி மையத்திற்கு செல்வதற்கு பதி லாக சேலம் அரசு கலைக்கல்லூரிக்கு வந்துள்ளார். இதையடுத்து அவரும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். இதேபோன்று, நாமக்கல் மாவட்டம், காளப்பநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த மோகனஸ்ரீ என்ற மாணவி, அரசு  கலை அறிவியல் கல்லூரிக்கு செல்வ தற்கு பதிலாக, அரசு மாதிரி பெண்கள்  மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத் திற்கு வந்துள்ளார். அப்பொழுது அவ ரது நுழைவுச்சீட்டை ஆய்வு செய்த அலு வலர்கள் தேர்வு மையம் மாறி வந்தது  குறித்து அவரிடம் தெரிவித்த பொழுது,  அந்த மாணவி மற்றும் அவருடன் வந்த  தாயார் கதறி அழ ஆரம்பித்துவிட்ட னர். இதனைக் கண்ட குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தவமணி உடனடி யாக அந்த மாணவியை காவல்துறை வாகனத்தின் மூலம், சரியான நேரத் திற்கு தேர்வு மையத்திற்கு அனுப்பி வைத்தார்.