இந்த ஆடைதான் அணியவேண்டும் என மிரட்டல் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாணவி புகார்
கோவை, செப்.24- கோவையில் சிலீவ்லெஸ் சுடிதார் அணிந்து பூமார்கெட் சென்ற சட்டக் கல்லூரி மாணவிக்கு மிரட்டல் விடுத்து, தாக்க முயன்ற நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய கோரி பாதிக்கப்பட்ட மாணவி கோவை மாந கர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். கோவை மாவட்டம், வீரபாண்டி அண்ணா நகரை சேர்ந்தவர் ஜனனி (20). இவர் ஆந்திராவில் உள்ள கல்லூரியில், எல்எல்பி சட்டம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஜனனி கடந்த 21 ஆம் தேதியன்று ஓவிய பயிற் சிக்காக “பூ மார்க்கெட்” சென்றார். அப் போது அங்கு சென்ற பணிகளை முடித்து விட்டு கிளம்பும்போது, பூ மார்க்கெட் டில் இருந்த முத்துராமன் என்ற வியா பாரி ஜனனியின் உடை குறித்து விமர் சித்ததாக தெரிகிறது. மேலும் இம்மாதிரி யான உடைகளை அணிந்து வரக் கூடாது, ஒருவேளை வந்தால் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பில்லை என கூறியுள் ளார். அப்போது அங்கிருந்த சிலர் வியா பாரிக்கு ஆதரவாக ஜனனியை அவதூ றாக பேசி தாக்க முற்பட்டதாக தெரி கிறது. இந்நிலையில் உடைகுறித்து விமர்சித்ததோடு அவதூறாக பேசி தாக்க முற்பட்ட நபர்கள் மீது நடவ டிக்கை எடுக்கக் கோரி சட்டக் கல்லூரி மாணவி ஜனனியுடன், வழக்கறிஞர்கள் வெண்மணி, ஜோதிக்குமார் அ.கரீம், ஆறுசாமி உள்ளிட்ட முற்போக்கு வழக் கறிஞர்கள் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புதனன்று புகார் மனு அளித்தார். இதுகுறித்து பேசிய சட்டக் கல்லூரி மாணவி ஜனனி, ஸ்லீவ்லெஸ் சுடிதார் அணிந்து பூ மார்க்கெட் சென்றேன். அப்போது அங்கிருந்த வியாபாரி ஒரு வர் இம்மாதிரியான உடை அணிந்து உள்ளே வரக்கூடாது. இது தவறு செய்ய தூண்டும் என பேசி விமர்சித்தார். அப் போது அவர் போட்டிருந்த உள்ளாடை (பனியன்) வெளியே தெரிகிறது, நீங்க ளும் ஷால் அணிந்து வாருங்கள் என கூறினேன். மேலும் பூ மார்க்கெட் உள்ளே வர ஆடை கட்டுப்பாடுகள் உள்ளதா? எந்த மாதிரியான ஆடை களை உடுத்த வேண்டும்? என கேட் டேன். தொடர்ந்து அங்கிருந்த மேலும் சிலர் வந்து என்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு செல்போனை பறிக்க முயன் றனர். அதேபோல் என்னையும், என்னு டன் வந்த நண்பரையும் தகாத வார்த்தை களால் பேசி தாக்க முற்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.