தொழில் முனைவோராக மாறும் சிறப்புக் குழந்தைகள்
, சிறப்புக் குழந்தைகளை தொழில் முனைவோராக மாற்றும் வகையில் புதிய முயற்சியாக சஹா மையம் முதன்முறையாக கோவையில் தொடங்கப்பட்டுள் ளது. இது உலக சாதனை புத்தகத் தில் இடம் பிடித்துள்ளது. சிறப்புக் குழந்தைகளை பராம ரித்து வரும் தனியார் நிறுவனம் இந் தியாவிலேயே முதன் முறையாக சிறப்புக் குழந்தைகளை தொழில் முனைவோராக மாற்றும் புதிய முயற்சியாக, கோவையில் சஹா எனும் ஒருங்கிணைந்த மையத்தை துவக்கி உள்ளனர். காஃபி ஷாப், நெசவு நிலையம் மற்றும் இசை என பொழுது போக்கு அம்சங்களுடன் பொதுமக்களும் வந்து செல்லும் வகையில் துவங் கப்பட்டுள்ள சஹா மையத்தை கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் திறந்து வைத்தார். இந்த கஃபே வில் ஆட்டிசம், நரம்பியல் குறைபாடுள்ளோர், வாடிக்கையாளர்களிடம் ஆர்டர்கள் எடுப்பது, சர்வீஸ் செய்வது போன்ற பணிகளை செய்கின்றனர். இதை யடுத்து அவர்கள் சொந்தமாக கடை துவங்கும் அளவுக்கு பயிற்சி பெற்ற பின்பு, தன்னார்வ நிறுவனம் மூலம் புது கடை வைத்து கொடுக்கவும் தயாராக உள்ளனர். இது குறித்து அந்நிறுவனத்தின் இயக்குனர் தீபா மோகன்ராஜ் கூறு கையில், ஆட்டிசம் மற்றும் சிறப்புத் தேவைகள் உள்ள நரம்பியல் குறை பாடு உள்ளோர் தங்களது திறமை களை வெளிப்படுத்தி, சுயசார்புடன் வாழ்வதற்குத் தேவையான திறன் களை வளர்த்துக் கொள்வதஙற கான பயிற்சிகளை வழங்கி, அவர் களை தொழில் முனைவோர்களாக மாற்றி தங்களது திறமைகளை வெளிப்படுத்தி, சுயசார்புடன் வாழ் வதற்குத் தேவையான திறன் களை வளர்த்துக் கொள்ள இந்த மையத்தை துவங்கி உள்ளது. மேலும், இந்த சஹா ஒருங்கிணைந்த மையம் அவர்க ளுக்கு சமூகத்தில் ஒரு அங்கமாக இருக்கவும், தங்களது திறமை களை வெளிப்படுத்தவும் ஒரு வாய்ப்பை அளிக்கும் என நம் பிக்கை தெரிவித்தார். இந்நிலையில் மனநலம் மற்றும் நரம்பியல் குறைபாடு உள்ளவர் களால் நிர்வகித்து நடத்த உள்ள இந்த மையம் உலகிலேயே முதன் முறையாக துவங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சஹா மையம் ஐன்ஸ் டீன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. இதனை தொடர்ந்து ஐன்ஸ்டீன் உலக சாதனை சான்றிதழை சிறப்புக் குழந்தைகளுக்கு புத்தாக்க இயக் குனர் மோனிகா வழங்கினார். இதுவரை மாற்றுத் திறனாளி கள் மட்டுமே பணியாற்றும் கஃபே பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் நிலையில், ஆட்டிசம் மற்றும் நரம்பியல் குறைபாடு உள்ள நபர் களை தொழில் முனைவோராக்கும் இந்த முயற்சிக்கு பெரும் வர வேற்பு கிடைத்துள்ளது.