கழிவுநீர் தேக்கம்: சுகாதார சீர்கேடு விவசாயிகள் சங்கத்தினர் மனு!
ஈரோடு, ஜூன் 28- ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றி யம், எழுமாத்தூரில் புதி தாக கட்டப்பட்ட சாக் கடையில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகா தார சீர்கேடு ஏற்பட்டுள் ளது. அதிகாரிகளின் கவனக்குறைவே இதற் குக் காரணம் என அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்க தாலுகா செயலா ளர் த.தங்கவேல் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். எழுமாத்தூர் வாரச்சந்தை அருகே சில மாதங்க ளுக்கு முன் கிழக்கே செல்லும் சாலையின் குறுக்கே புதிய சாக்கடை பாலம் கட்டப்பட்டது. இந்தப் பணி நடை பெற்றபோதே, சாக்கடை நீர் வடிந்து செல்லும் இடத் தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் பெரிய அளவிலான பிரதான குழாய் (மெயின் லைன்) பதிக்கப் பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது கழிவுநீர் சரி யாக வடியாமல் குளம் போல் தேங்கி நிற்கிறது. சம்பந்தப் பட்ட அதிகாரிகள் பணிகளை நேரில் சென்று கண் காணிக்காததே இந்த நிலைக்குக் காரணம். மேலும், கழி வுநீர் தேக்கத்தால் கொசுக்கள் அதிக அளவில் உற் பத்தியாகி டெங்கு போன்ற நோய்கள் பரவும் அபா யம் ஏற்பட்டுள்ளது. சாலையில் செல்ல முடியாத அள வுக்கு துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். கடைகள், வீடுகள் நிறைந்த பகுதியாகவும், வாராந்திர சந்தை நடை பெறும் இடமாகவும் இருப்பதால் உள்ளூர் மற்றும் வெளி யூர் மக்கள் பெருமளவில் வந்து செல்லும் இந்த இடத்தில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவது கவலை யளிக்கிறது. எழுமாத்தூர் பொதுமக்கள் சார்பாக மாவட்ட நிர்வா கம் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, தேங்கியுள்ள கழிவுநீரை வெளியேற்றி, சாக்கடையை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது மனு வில் வலியுறுத்தியுள்ளார்.