நூறுநாள் வேலைத்திட்டத்தில் ஊதிய நிலுவை
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் விவசாயத் தொழிலா ளர்களுக்கு கடந்த மூன்று மாதங்க ளாக ஈரோடு மாவட்டத்தில் ஊதியம் வழங்கப்படாததால், தொழிலாளர் கள் அவதிக்குள்ளாகி வருகின்ற னர். நூறுநாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்க ளுக்கு ஒன்றிய அரசு உரிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. ஒவ் வொரு ஆண்டு நிதிநிலை அறிக் கையிலும், இத்திட்டத்திற்கான நிதியை ஒன்றிய மோடி அரசு குறைத்து வருகிறது. இத்திட்டத்தை சீர்குலைக்கும் நோக்கத்தில் ஒன் றிய அரசு செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே பல மாவட் டங்களில் ஊதியம் நிலுவையில் உள்ளது. இதேபோன்று ஈரோடு மாவட்டத்திலும் பல்வேறு பகுதிக ளில் ஊதிய நிலுவை உள்ளது. இது குறித்து தமிழக முதல்வர் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியும் இது வரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் பாதிக் கப்பட்டுள்ளனர். தங்கள் வாழ்வா தாரமே இந்த வேலைதான் என்றும், மூன்று மாதங்களாக ஊதியம் கிடைக்காததால் அன்றாட வாழ் கையை நடத்துவதே சிரமமாக உள்ளதாகவும் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில், மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளிக் கப்பட்டது. மனுவைப் பெற்றுக் கொண்ட அலுவலர், விரைவில் நிதி வந்துவிடும் என்றும், உடனடியாக ஊதியம் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார். இந்நிகழ்வில், அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் தாலுகா செய லாளர் டி.தங்கவேல், தாலுகா தலை வர் கணேசன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தாலுகா செயலா ளர் எம்.சசி, மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் சொங்கப்பன் மற் றும் அண்ணாதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், ஈரோடு மாவட்டத்தின் பிற ஒன்றி யங்களிலும் ஊதிய நிலுவை கேட்டு வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் மனு அளிக்கப்பட்டது.