ரோஜாக்கள் பேசும் கடல் உயிரினங்களின் பாதுகாப்பு
உதகை, மே 10 – அழிந்து வரும் கடல் உயிரினங் களை பாதுகாக்கும் அவசியத்தை உணர்த்தும் வகையில் உதகை ரோஜா பூங்காவில் சனியன்று கண்கவர் ரோஜா கண்காட்சி தொடங்கியது. நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 1995 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா வால் 10 ஏக்கர் பரப்பளவில் உதகை ரோஜா பூங்கா நிறுவப்பட்டது. ஆரம் பத்தில் 1,500 ரக ரோஜா செடிகள் நடப் பட்ட இப்பூங்காவில் தற்போது 4,000-க் கும் மேற்பட்ட ரகங்களில் சுமார் 30,000 ரோஜா செடிகள் பூத்துக்குலுங்குகின் றன. தென்கிழக்கு ஆசியாவிலேயே சிறந்த ரோஜா பூங்காவாக கருதப்ப டும் இது, 2006 ஆம் ஆண்டு ஜப்பான் ஒசாகாவில் நடைபெற்ற சர்வதேச ரோஜா மாநாட்டில் ‘கார்டன் ஆஃப் தி எக்ஸ்சலன்ஸ்’ விருதையும் பெற்றது. தற்போது பூங்காவில் உள்ள ரோஜா செடிகள் கவாத்து செய்யப்பட்டு, உரமி டப்பட்டு, வண்ணமயமான ரோஜாக்கள் பூக்கத் தொடங்கியுள்ளன. மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் தோட்டக்கலைத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து ஆண்டுதோறும் கோடை விழாக்காலங்களில் பல்வேறு மலர் கண் காட்சிகளை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 20 ஆவது ரோஜா கண் காட்சி சனியன்று துவங்கியது. அரசு தலைமை கொறடா கா.ராமசந்திரன், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, நீல கிரி மாவட்ட காவல் துறை கண்காணிப் பாளர் நிஷா, ஆர்டிஓ சதீஷ், தோட்டக் கலைத்துறை இணை இயக்குநர் சிப் பிலாமேரி, உதவி இயக்குநர் பைசல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கண்காட்சியில் சுமார் 2,00,000 பல வண்ண ரோஜா மலர்களைக் கொண்டு டால்பின், பென்குயின், முத்து சிற்பி, கடல் குதிரை, நீல திமிங்கலம் என பல்வேறு வகையான மீன்கள், நத்தை, கடல் கன்னி, நட்சத்திர மீன் மற்றும் அழிந்து வரும் கடல் உயிரினமான கடல் பசு போன்ற வடிவங்கள் தத்ரூபமாக உருவாக்கப்பட்டிருந்தன. மேலும் “சேவ் அக்குவாடிக் வோர்ல்டு” (Save Aquatic World) என்ற வாசகமும் ரோஜாக்களால் வடிவமைக்கப்பட்டு பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த் தது. மேலும், கிருஷ்ணகிரி, மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர், கள்ளக் குறிச்சி போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த தோட்டக்கலைத் துறையினர் பல வண்ண ரோஜாக்களைக் கொண்டு இசைக்கருவிகள் மற்றும் மீன் போன்ற கவர்ச்சியான வடிவங்களை உருவாக்கி யிருந்தனர். இக்கண்காட்சியில் தோட் டக்கலைத் துறையின் சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. ரோஜா செடி வளர்ப்பில் ஆர்வமுள் ளவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு கண்காட்சி யின் நிறைவு விழாவில் சிறப்பு பரிசு கள் வழங்கப்பட உள்ளன. 20 ஆவது ரோஜா கண்காட்சி வரும் 12 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ள தால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் வருகை தந்து இந்த அழகிய ரோஜா கண் காட்சியை கண்டு ரசிக்குமாறு மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
ஏற்காட்டிற்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு
கோடை விடுமுறையையொட்டி, ஏற்காட்டிற்கு சுற்றுலா வரும் பயணிக ளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடு முறை விடப்பட்டுள்ளதால் சுற்றுலாத் தளங்களில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். சேலம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தளமான ஏற்காட்டிற்கு சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களை மகிழ்விக் கும் விதமாக அண்ணா பூங்கா, ரோஜா பூங்கா, தாவரவியல் பூங்காவில் பல்வேறு வகையான மலர் செடிகள் வைக்கபட்டுள்ளன. அதேபோல் அமெரிக்கா, ஜப் பான், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகளை தாயகமாகக் கொண்ட டேலியா, சால்வியா, பிளாகஸ், ஜின்னியா, பெகோனியா, பேன்சி, ஹோலிஹாக், டெல்பினியம், ஜெரானியம், பெட்டுனியா, ஸ்டாக்ஸ், கேலன் டுலா, ஸ்வீட், வில்லியம் உட்பட பல்வேறு வகையான மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு, தற்போது பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. இந்நிலையில், வெள்ளியன்று பல்வேறு இடங்களிலிருந்து ஏற்காட்டில் சுற்றுலாப் பயணி கள் குவிந்தனர். அண்ணா பூங்காவில் பூத்து குலுங்கும் மலர்களின் நடுவே செல்பி எடுத்தும், குழு புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர். கோடை சீசன் களை கட்டியுள்ளதால், ஏற்காட்டில் உள்ள அனைத்து விடுதிகளிலும் அறைகள் நிரம்பியுள்ளன.